திருச்செந்தூர் அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்ததில் அமில் நகரை சேர்ந்த இரண்டு மீனவர்கள் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு உடனடியாக ஹெலிகாப்டர் உதவியுடன் அவர்களை தேட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.  காலையில மீன்பிடித் தொழிலையே பிரதான தொழிலாக கொண்டு வரும் இந்த பகுதியில் 170-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளது. இந்தநிலையில்  இங்குள்ள மீனவர்கள் தினசரி நள்ளிரவு பைபர் படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு அன்று மாலையில் கரை திரும்புவது வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் நேற்று நள்ளிரவு  மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளனர்.  அப்போது அமலிநகரை சேர்ந்த அஸ்வின்  என்பவருக்கு சொந்தமான படகில் அஸ்வின், பிரசாத் (40), பால்ராஜ் (22), நித்தியானந்தம் (42 )ஆகிய நான்கு பேரும் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடற் பகுதியில் 22 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்த வேளையில் ஆழ்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இந்த காற்றின் வேகத்தில் சிக்கி நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நால்வரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர்.


 




இதில் பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோர் கடலில் தத்தளித்ததை பார்த்த மற்ற படகில் சென்ற மீனவர்கள் காப்பாற்றினர். மேலும் அஸ்வின், பிரசாத் ஆகியோரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. கடலில் காற்றின் வேகம் அதிக அளவு காணப்பட்டதால் மீட்கப்பட்ட இரண்டு பேரை மட்டும் கரைக்கு அழைத்து வந்தனர். இதுதொடர்பாக கரையில் இருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதி மீனவர்கள் ஆறு விசைப்படகுகளுடன் காணாமல் போன இரண்டு மீனவர்களை தேடிச் சென்றுள்ளனர். 




இந்த நிலையில் கடல் மீட்கப்பட்டு கரை திரும்பிய மீனவர் பால்ராஜ் நடுக்கடலில் தூரம் அதிகம் இருப்பதாலும், காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதாலும் காணாமல் போனவர்களை மீட்பதில் சிரமம் என்றும் தேடிச் செல்லும் விசைப்படைகள் காற்றின் வேகத்தில்  சிக்கி கவிலும் ஆபத்து உள்ளது. எனவே அரசு ஹெலிகாப்டர் உதவியுடன் மீனவர்களை தேட வேண்டும் என்றும் இது தொடர்பாக  மீன்வளத் துறையிடம் கோரிக்கை வைத்திருப்பதாக அவர்  தெரிவித்தார்.




இந்த தகவலறிந்த அமலிநகர் மீனவர்கள் 7 படகில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கடலுக்கு சென்று தேடும் பணியில் இருந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாயமான அஸ்வினுக்கு மோனிகா என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரசாந்திற்கு ஸ்டெபிலா என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். மீனவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண