இந்திய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத் துறை சார்பில் ஐந்தாவது சித்த மருத்துவ திருநாள் நிகழ்ச்சி நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து நேற்று நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் கலந்துகொண்டு சித்த மருந்து கண்காட்சி மற்றும் சித்த மூலிகை கண்காட்சியை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் சித்த மருத்துவ ஆர்வலர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் கூறும் பொழுது, 




 நெல்லை மாவட்ட சித்த மருத்துவ துறை சார்பில் மாவட்ட அறிவியல் மையத்தில் ஐந்தாவது சித்தர் திருநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சித்த மருந்துகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மருந்துகளின் கண்காட்சி அரங்குகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது,  சித்த மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் சித்த மூலிகை கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது, கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் ஆகியவை மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற மருந்துகளில் ஒன்று, இதனை மக்கள் அனைவரும் பயன்படுத்தி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் சித்த மருந்து நிறுவனங்கள் அதிகரித்து வருவதாகவும், நாள்பட்ட நோய்களுக்கு மட்டுமே சித்த மருந்து என்ற நிலை மாறி நீரழிவு நோய் , தொற்று நோய்களுக்கும் சித்த மருந்துகளில் நல்ல பலன் கிடைப்பதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கொரோனா காலத்திற்கு பின் சித்த மருத்துவ நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.




இன்றைய நிலவரப்படி, 408 சித்த மருத்துவ நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது,  மருத்துவமனை அல்லாத இடங்களில் சித்த மருந்துகளைப் பெற்று பொதுமக்கள் உபயோகிக்கும் போது மருந்து  தயாரிப்பதற்கான உரிமம்,  மருந்துக்காண சான்றிதழ்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பின்னர் பொதுமக்கள் உபயோகப்படுத்த வேண்டும், கபசுரக் குடிநீர் உடலில் வைரஸ் எண்ணிக்கை பரவாமல் தடுக்கும் மருந்தாக கொரனாவிற்கு கபசுர குடிநீர் வழங்கபட்டு வருகிறது. ஒமிக்ரான் நோய்க்கு கபசுர குடிநீர் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சி நடந்துவருகிறது. கபசுரக் குடிநீர் நல்ல மருந்தாக செயல்படும் சர்வதேச அளவில் கபசுரக் குடிநீருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.




கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 வது அலையில் சித்த மருத்துவமனை மூலம் 69 மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது, சுமார் 50 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொண்டு குணம் அடைந்தார்கள். இவர்களுக்கு சித்த மருந்து மட்டுமே மருந்தாக கொடுக்கப்பட்டு நோய்த் தன்மை குறைக்கப்பட்டு பூரண நலம் பெற செய்யப்பட்டது. சித்த மருத்துவ முறையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 0.01% மட்டுமே சிக்கலான நிலைக்கு நோயாளிகள் சென்ற பரிந்துரை விகிதம் எனவும் தெரிவித்தார்,