மாவீரன் ஒண்டிவீரன், 18-ம் நூற்றாண்டில், நெற்கட்டான் செவ்வல் பகுதியை ஆட்சி செய்த பூலித்தேவனின் படைத் தளபதியாக இருந்தார் . அவர் தனி ஒருவனாக ஆங்கிலேய படைகளை எதிர்த்ததன் காரணமாக ஒண்டி வீரன் என்றும் அழைக்கப்படுகிறார்.


நெற்கட்டான் செவ்வல்


தற்போதைய நெல்லை மாவட்டத்தில் உள்ள நெற்கட்டான் செவ்வல் பகுதியை, 18 நூற்றாண்டில் பாளையக்காரர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது நெற்கட்டான் செவ்வல் பாளையத்தை ஆட்சி செய்த பாளையகாரரான பூலித்தேவனின் படைகளுக்கு தளபதியாக ஒண்டிவீரன்  செயல்பட்டார் . படைகளத்தில் செயல்படுவதில் ஒண்டிவீரன் மிகவும் திறமை வாய்ந்தவர்.




                                                            படம்: பூலித்தேவன், நன்றி: Flickriver


நெற்கட்டான் செவ்வல் பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில், ஆற்காடு நவாப் வரி வசூலித்து வந்தனர். பின்னர் அவர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றனர். பூலித்தேவனிடம் வரி கட்டுமாறு ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டனர். ஆனால் அதற்கு படைத்தளபதி ஒண்டிவீரன் அரசனான பூலித்தேவன் மறுத்து விட்டார்.


ஆங்கிலேயர் துரத்தியடிப்பு


அந்நிய நாட்டினர் ஆங்கிலேயரின் போக்கை கண்டு 1755 ஆம் ஆண்டில் பூலித்தேவன் படைத்தளபதி ஒண்டிவீரன் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு, தோற்கடித்து மதுரைக்கு திருப்பி அனுப்பினர்.


ஆனால் தோற்கடிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள், பல்வேறு பகுதிகளிலிருந்து பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களை இறக்கினர். இதை அறிந்த கொண்ட பூலித்தேவன், ஆங்கிலேயர்களின்  சதி திட்டங்களை  முறியடிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அதை முறியடிக்க கூடிய சரியான ஆள் ஒண்டிவிரன் என முடிவு செய்தார். அப்போது ஆங்கிலேயரின் முகாமிற்கு தனி ஒரு ஆளாக சென்று, வெடி மருந்துகளை அழிக்கும் பொறுப்பை ஒண்டிவீரனிடம் பூலித்தேவன் ஒப்படைத்தார்.


கை துண்டிப்பு:


ஒண்டிவீரன் , இரவின் ஆங்கிலேயரின் முகாமிற்கு சென்று இலைதழைகளை மூடிக்கொண்டு தலைமறைவாக இருந்தார். அப்போது குதிரையை கட்டுவதற்காக வந்த ஆங்கிலேயர் ஒருவர் , இலை தலைகளுடன் தரையில் மறைந்திருந்த ஒண்டிவீரன் கையில் ஈட்டியை குத்தியதாக கூறப்படுகிறது. சத்தம் போட்டால் ஆங்கிலேயர் தெரிந்து கொள்வர் என எண்ணி, வலியை பொறுத்துக் கொண்டார். ஈட்டியை பிடுங்கினால் குதிரை அனைவரையும் எழுப்பி விடும் எண்ணி, ஈட்டியை புடுங்காமல், தன் கையை வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.


சிதைந்த கோட்டை:


பின் பீரங்கிகளை ஆங்கிலேயர்களின் கோட்டை பக்கமே திருப்பி வைத்து விட்டு, ஒலி எழுப்பி விட்டு புறப்பட்டார் ஒண்டிவீரன்.சத்தம் கேட்ட ஆங்கிலேயர்கள் எதிரிகள் வந்துவிட்டனர் என எண்ணி, பீரங்கிகளை இயக்கினர். ஆனால் பீரங்கிகள் ஆங்கிலேயரின் பக்கமே திரும்பி தாக்கியதால், ஆங்கிலேயர்கள் கோட்டை சிதைந்தது. மேலும்  ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.


பூலித்தேவன் மறைவிற்கு பிறகும், அவர்களின்  மகன்களுக்கு உதவியாக இருந்து ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றினார். ஒண்டிவீரன்  கடைசி காலம் மற்றும் அவரது மரணம் குறித்து, தெளிவான தகவல்கள் இல்லை.


தபால் தலை:


ஒண்டிவீரனின் தியாகத்தை போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு பாளையங்கோட்டையில், மணி மண்டபத்தை கட்டியுள்ளது.இந்நிலையில் மாவீரன் ஒண்டிவீரனின் நினைவு தபால் தலை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.