நெல்லையில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் தூத்துக்குடி அருகே விபத்தில் சிக்கி கைதாகியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையை அடுத்த வி.எம்.சத்திரம் ஜான்சி ராணி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (44). இவர் தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வனிதா ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இரவு ராமசாமி அவரது மகள், மகன் ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கும்பல் ராமசாமி வீட்டிற்குள் புகுந்து வீட்டில் கிடந்த துணிகளை கொண்டு ராமசாமி மற்றும் அவரது குழந்தைகளை கட்டிப்போட்டனர். பின்னர் அங்குள்ள அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 50 பவுன் நகை, விலை உயர்ந்த செல்போன்கள், மற்றும் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துள்ளனர்.
அந்த நேரத்தில் வனிதா வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.அவர் வருவதை அறிந்த கொள்ளையர்கள் 5 பேரும் நகை உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பின்வாசல் வழியாக தப்பி சென்றுவிட்டனர். வீட்டிற்குள் வந்த வனிதா தனது கணவர் மற்றும் குழந்தைகள் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களது கட்டுகளை அவிழ்த்து விட்டார். உடனடியாக வீட்டில் இருந்து வெளியே வந்த ராமசாமி கொள்ளையர்களை தேடி உள்ளாா். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து தூத்துக்குடி சாலையில் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் மற்றும் சரவணக்குமாா் ஆகியோா் தலைமையில் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் கலைந்து கிடந்த பொருட்களை தடயவியல் துறையினர் சோதனை செய்தனர்.
இதற்கிடையில் ஐந்து பேரும் இரண்டு இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நோக்கி விரைந்துள்ளனர் அப்போது புதுக்கோட்டை அருகே ஒரு இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகியதில் கொள்ளையர்கள் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.இதற்கிடையில் நெல்லையில் கொள்ளை நடந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து தென்பாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார் மோப்பம் பிடிப்பதை அறிந்த கொள்ளை கும்பல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கையோடு தப்பி ஓட முயன்ற ஓட முயன்றனர்.ஆனால் கொள்ளை கும்பலை காவல்துறையினர் விரட்டி பிடித்து கைது செய்தனர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடியை சேர்ந்த முத்து, கண்ணன், சில்வர் ஸ்டார், கிஷோர், சம்சுதீன், என்பது தெரியவந்தது இதில் படுகாயம் அடைந்த முத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார் தப்பி ஓட முயன்ற கண்ணன், சில்வர் ஸ்டார் , கிஷோர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர் தப்பி ஓடிய சம்சுதீனை போலீசார் தேடி வருகின்றனர்.