நெல்லை பேட்டையில் இருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையில் உள்ளது ஆதாம் நகர் பகுதி. நெல்லை மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான குழாய்கள் ஆதாம் நகர் எல்லை பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவது வழக்கம். இதன் காரணமாக குப்பை மேடாக அந்த பகுதி காட்சி அளித்து வருகிறது. இந்த நிலையில்  நேற்றைய தினம் மதிய வேளையில் அவ்வழியாக சென்ற ஒரு சிலர் சடலமொன்று சாலையின் ஓரம் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளனர்,




மேலும் இது தொடர்பாக பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட சடலத்தை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தடவியல் நிபுணர்களும் வரவழைத்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.




போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் ஒரு பெண்ணின் உடலை அந்தப்பகுதியில் வீசியதுடன் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. மேலும் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தின் கழுத்தில் துணி ஒன்று இறுக கட்டியிருந்ததையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் ஆதாம் நகர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பேட்டை காவல்துறையினர் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் யார்? உயிருடன் எரித்தனரா? அல்லது கொலை செய்து இந்த பகுதியில் கொண்டு வந்து எரிந்தனரா? இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், கழுத்தில் துணி இறுக கட்டி எரிந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண