கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் புதிதாக அமைக்கப்பட்ட நம்ம நாகர்கோவில் என்னும் மாநகராட்சியின் 'செல்ஃபி பாயிண்ட், வரவேற்பு சின்னத்தை தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், புதியதாக தேர்வு செய்யப்பட்ட மேயர் மகேஷ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி அண்ணா சிலை அருகே நம்ம நாகர்கோவில் என்ற செல்ஃபி பாயிண்ட் எந்த வரவேற்பு சின்னம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டது. ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நகை கடையின் பங்களிப்புடன் நிறுவப்பட்ட இந்த செல்பி பாயின்ட் ஐ இன்று மாலை தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.