தூத்துக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கணவன் மனைவி மிளகாய் பொடி தூவி வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கோவில்பட்டியிலும் அதே போன்று கொலை அரங்கேறி உள்ளது.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் சாத்தூர் வாழவந்தாபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (30) என்பவர் இருசக்கர வாகன காப்பகம் நடத்தி வருகிறார். நேற்று இரவு ஆனந்தராஜ் வாகன காப்பகதில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்து கிடந்துள்ளார். அவரது உடலை சுற்றி மிளகாய் பொடி கிடந்துள்ளது. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடுதல் பஸ் நிலையத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வாழவந்தாபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (30) என்பவர் இருசக்கர வாகன காப்பகம் நடத்தி வருகிறார். இரவு ஆனந்தராஜ் வழக்கம்போல பணியில் இருந்துள்ளார். பின்னர் வாகன காப்பகம் முன்பு கட்டில் போட்டு தூங்கி உள்ளார். இந்நிலையில் அதிகாலையில் வாகன காப்பகத்தில் வாகனங்களை நிறுத்தியவர்கள் எடுக்க வந்தபோது , ஆனந்தராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மேலும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து குற்றவாளிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனந்தராஜை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் அவரது உடலை சுற்றி மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பியுள்ளனர்.




இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.வாகன காப்பகத்தை ஆனந்தராஜின் உடன்பிறந்த அண்ணன் சுந்தர்ராஜ் என்பவர் நடத்தி வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் ஆனந்தராஜிடம் ரூ.3.80 லட்சத்திற்கு 2 ஆண்டிற்கு குத்தகைக்கு கொடுத்தாராம். பின்னர் அவர் வாகன காப்பக உரிமையை திருப்பி கேட்டபோது அவர் ரூ.5லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சுந்தர்ராஜின் 19 வயது மகன் மற்றும் அவரது நண்பரான 17 வயது சிறுவன் சேர்ந்து ஆனந்தராஜை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.