யூடியூபர் ஜி.பி.முத்து சமூக வலைதளத்தில் வரக்கூடிய வருமானத்திற்காக தவறான தகவல்களை பரப்புவதாகவும் பெண்களை பற்றி சமூக வலைதளத்தில் தவறாக பேசி வருவதாகவும் குலசேகரன் பட்டினம் காவல் நிலையத்தில் ஊர் பொதுமக்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். 

Continues below advertisement

சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் ஜி.பி.முத்து. இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது மூலம் மேலும் பிரபலமானார். சில படங்களிலும் நடித்துள்ளார். ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரத்தில் வசித்து வருகிறார். 

இவருக்கும் அந்தப் பகுதியில் உள்ள உச்சிமாகாளி அம்மன் பட்டறை அம்மன் கோயில் கட்டுவதற்கும் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அப்பகுதி மக்கள் கோயில் கட்டும் பணியை தொடங்கினர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் மாந்திரீக வேலை செய்வதாக ஜி.பி.முத்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி பெரும் பேசும் பொருளாக மாறியது. 

Continues below advertisement

 

 

இந்த நிலையில், பெருமாள்புரம் பகுதி ஊர் பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு இரண்டு வேனில் வந்தனர். காவல் நிலையத்தில் ஜி.பி. முத்து மீது புகார் அளித்தனர். அந்தப் புகாரில், சமூக வலைதளத்தில் வரக்கூடிய வருமானத்திற்காக ஜி.பி. முத்து கோயிலில் நடந்த சிறப்பு பூஜையை மாந்திரீக பூஜை நடப்பதாக வீடியோ வெளியிட்டு தவறான தகவல்களை பரப்பி அந்த வீடியோவை வைரலாகியதாகவும், மேலும் அந்தப் பகுதியில் உள்ள சில பெண்களைப் பற்றி பேசி வீடியோ வெளியிட்டதாகவும் மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் பணிகள் கட்டப்பட்டு வருவதை பொதுப் பாதையில் கட்டப்படுவதாக கூறி தவறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்பி வந்ததாகவும், ஜி.பி.முத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் புகார் மனு கொடுக்க வந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.