தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான உள்நாட்டு விமான நிலையமாகும். இது தூத்துக்குடி நகரத்தின் வடமேற்குப் பகுதியில், விழுப்புரம் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் அருகில், வாரியூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் இந்திய விமானப்படையின் கீழ் இந்திய விமான ஆணையத்தால் (Airports Authority of India - AAI) நிர்வகிக்கப்படுகிறது. தூத்துக்குடி விமான நிலையம் 1992 ஆம் ஆண்டு மக்களுக்கு சேவையளிக்கத் தொடங்கியது. தொடக்கத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பின்னர், மக்கள் பயன்பாடு அதிகரித்ததையொட்டி, இதன் வசதிகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் மேம்படுத்தப்பட்டன.
தூத்துக்குடி விமான நிலையம், நகர மையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் விரிவாக்கப்பணிகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. ரன்வே நீட்டிப்பு, புதிய டெர்மினல் கட்டடம் மற்றும் நவீன வசதிகள் கொண்டு, இது ஒரு பன்னாட்டு விமான நிலையமாக மாற்றப்பட்டு புதிய வடிவமைப்பில் உள்ளது. இந்த நிலையில் தற்போது ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தினை கடந்த மாதம் 25ம் தேதி பிரதம் மோடி திறந்து வைத்தார். தற்போது புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை இங்கு பார்க்கலாம்.
தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சிகளை மேலும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசு சார்பில் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரவு நேரத்திலும் விமானம் தரையிறங்கும் படியும், முதலில் 1,350 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதையானது இப்போது 3,115 மீட்டர் நீளம் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று ஒரே நேரத்தில் 5 ஏ.321 ரக விமானங்களை நிறுத்தக்கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
* தூத்துக்குடி புதிய விமான நிலையம் சுமார் 17 ஆயிரத்து 341 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.* புதிய விமான முனையத்தில் 5 விருந்தினர்கள் அறைகள், பெரிய உணவகம், சிற்றுண்டி கடைகள், மருந்தகம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.* புதிய முனையத்தின் 4 வாயில்களும், 21 பயணிகள் செக்-இன் கவுன்டர்களும் உள்ளன.
* 1 மணி நேரத்துக்கு 1,440 பயணிகளை கையாலும் வகையில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது.* ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.* இரவு நேரத்திலும் விமானம் தரையிறங்கும்படி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.* 1,350 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதையானது இப்போது 3,115 மீட்டர் நீளம் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.
* தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் 1 கிமீ தூரத்துக்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.* 500 பயணி வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகள் உள்ளன.* 2 விஐபி ஓய்வு அறைகள், 644 இருக்கைகள், 2 கன்வேயர்கள் பெல்ட்கள், 21 செக் இன் கவுண்டர்கள், 3 ஏரோ பிரிட்ஜ்கள், 4 நுழைவு வாயில்களுடன் இந்த புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.