Just In





உலக பாரம்பரிய வார கொண்டாட்டம்... தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
வார விழாவில் பாரம்பரிய விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணி, கருத்தரங்கம், பாரம்பரிய நடைபயணம், பாரம்பரிய சுற்றுலா, கல்லூரி மாணவர்களுக்கான வினா-விடை போட்டி நடக்கிறது.

தஞ்சாவூர்: உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், பாரம்பரிய விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் பயிற்சி கலெக்டர் உத்கர்ஷ் குமார் தொடக்கி வைத்தார்.
உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் இன்று 19ம் தேதி முதல் வரும் 25ம் தேதி வரை பல்வேறு பாரம்பரிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த ஒரு வார விழாவில் பாரம்பரிய விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணி, கருத்தரங்கம், பாரம்பரிய நடைபயணம், பாரம்பரிய சுற்றுலா, கல்லூரி மாணவர்களுக்கான வினா-விடை போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஓவிய விளக்கப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்நிகழ்வுகள், நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பெருமையையும், பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரணிக்கு முன்னதாக நையாண்டி மேளம், காளையாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் புலியாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரி முதன்மையர் ஜெகன்மோகன், இந்திய தொல்லியல் துறை பாதுகாப்பாளர் விக்னேஷ், மாநகர நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் தமிழ்ப் பல்கலைக்கழகம், அரசு வேளாண் கல்லூரி, பெரியார் மணியம்மை கல்லூரி, வல்லம் அன்னை தெரசா பயிற்சி நிறுவனம் சார்ந்த 250 மாணவ, மாணவிகள் பாரம்பரிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி உற்சாகமாக பங்கேற்றனர்.
தமிழ் பல்கலைக்கழக சுவடி மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் பவானி, உதவி சுற்றுலா அலுவலர் வரதராஜன், பெரியார் மணியம்மை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பாக்யராஜ், பாலரத்தினம், அன்னை தெரசா பயிற்சி நிறுவனம் இயக்குனர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் சிறப்பாக செய்திருந்தார்.
உலக பாரம்பரிய வாரம், நவம்பர் 19 முதல் நவம்பர் 25 வரை அனுசரிக்கப்படுகிறது, இது கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய கொண்டாட்டமாகும். யுனெஸ்கோவின் தலைமையில் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடன், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI), இந்தியாவில் நிகழ்வை நடத்துவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. 2024 உலக பாரம்பரிய தினத்தின் கருப்பொருள் 'பன்முகத்தன்மையைக் கண்டறிந்து அனுபவியுங்கள்' என்பதாகும்.
இரண்டு பேரழிவுகரமான உலகப் போர்களைத் தொடர்ந்து தார்மீக மற்றும் அறிவுசார் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக 1945 இல் உலக பாரம்பரிய வாரம் உருவாக்கப்பட்டது. இது நீடித்த உலக அமைதியை ஆதரிக்கும் ஒரு வழியாகும். இந்த வாரம், பல ஆண்டுகளாக கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கொண்டாட்டமாக வளர்ந்துள்ளது, விலைமதிப்பற்ற வரலாற்று தளங்களைப் பாதுகாப்பதில் பங்கேற்க குடிமக்கள், சமூகங்கள், அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்களை தீவிரமாக ஊக்குவிக்கிறது.
இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மதிப்பை எடுத்துக்காட்டுகிறது, பல்வேறு சமூகங்களுக்கு இடையே மரியாதை மற்றும் புரிதலை ஊக்குவிக்கிறது. விலைமதிப்பற்ற இடங்களைப் பாதுகாப்பதற்கும், பாதுகாப்பதற்கும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது, வரவிருக்கும் தலைமுறையினருக்கு பாரம்பரியத்தின் மகத்துவத்தை உணர்த்துகிறது.
மனித பாரம்பரியத்தின் பன்முகத்தன்மை மற்றும் ஆழத்தை மதிக்கிறது. நமது பொதுவான மரபைப் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு உணர்வை வளர்ப்பதன் மூலம் இளைஞர்களை பாதுகாப்பாளர்களாக ஆக்குவதற்கு உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.