தஞ்சாவூர்: உங்கள் சொந்த ஊரில் மாதம் ரூ.22 ஆயிரம் சம்பளத்தில் வேலை கிடைத்தால் அப்படி ஒரு ஜாக்பாட் வாய்ப்பு வந்திருக்கு. 

Continues below advertisement

மதுரையைச் சேர்ந்த 'பத்மஸ்ரீ பிரஷ் வேர்ல்ட்' நிறுவனம், தனது அலுவலக விரிவாக்கத்திற்காக புதிய பணியாளர்களைத் தேர்வு செய்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் ரூ.13,000 முதல் ரூ.22,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

மதுரை மாவட்டத்தில் உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கும் 'பத்மஸ்ரீ பிரஷ் வேர்ல்ட்' நிறுவனம், தனது அலுவலக செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய பணியாளர்களைத் தேர்வு செய்து வருகிறது. குறிப்பாக, மதுரையைச் சுற்றியுள்ள உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதன் மூலம், அந்தந்தப் பகுதியிலேயே நிலையான வருமானத்தைப் பெற வழிவகை செய்கிறது. இந்த உற்பத்தி நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்களிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Continues below advertisement

தற்போது இந்த நிறுவனத்தில் இரண்டு முக்கியப் பிரிவுகளில் ஆட்கள் தேவைப்படுகிறார்களாம். அலுவலகத்தின் அன்றாட வரவு-செலவு மற்றும் பில்களைக் கையாளும் அலுவலக கணக்கு பிரிவு எக்ஸிகியூட்டிவ் (Office Billing Executive) பணி மற்றும் நிறுவனத்தின் மொத்த நிதி மேலாண்மை மற்றும் கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் முதன்மை கணக்காளர் (Senior Accountant) ஆகிய பொறுப்புகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.கணக்குத் துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அவர்கள் வகிக்கும் பொறுப்பு மற்றும் முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் நியாயமான ஊதியம் வழங்கப்படுகிறது. மாதச் சம்பளமாக ரூ.13,000 முதல் ரூ.22,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் நிலையான வேலையைத் தேடுபவர்கள், குடும்பத்தை விட்டு பிரியாமல் உங்கள் சொந்த ஊரிலேயே இருந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தச் சம்பள வரம்பு ஒரு நல்ல பொருளாதாரத் தொடக்கமாக அமையும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 2026 பிப்ரவரி 5 ஆகும். தகுதியான நபர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே விண்ணப்பிப்பதன் மூலம் நேர்காணல் வாய்ப்புகளை உறுதி செய்து கொள்ளலாம்.

நீங்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், கீழே உள்ள முகவரிக்கு உங்கள் சுயவிவரக் குறிப்பை (Resume) அனுப்பலாம் அல்லது நேரில் சென்று அணுகலாம்.

அலுவலக முகவரி: எண்: 20, ஆசாத் தெரு (Azad Street), அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில், காந்தி நகர், மதுரை – 625020. அல்லது எண்: 197-A, முதல் தளம், சிட்டி யூனியன் வங்கி அருகில், ஈஸ்ட் வெளி வீதி (East Veli Street), மதுரை – 625001. இந்த இரண்டு முகவரியிலும் வேலை வாய்ப்பு குறித்து தெரிந்து உங்கள் விண்ணப்பத்தை கொடுத்து பயன் பெறலாம். 

தொழிற்சாலை முகவரி: பிளாட் எண்: 80, பெண்கள் தொழிற்பேட்டை (Womens Industrial Estate), கப்பலூர், மதுரை – 625008.

மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண்கள்: 95009 51432, 93605 52834 / 93441 52834, padmashribrush@gmail.com, padmashrioffice@gmail.com  ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம். காலதாமதம் செய்யாமல் உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விடுங்கள். சொந்த ஊரிலேயே நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைப்பது சூப்பர்தானே.