தஞ்சாவூரில் போலி மருத்துவம் பார்த்த இரண்டு பேர் கைது

மதுக்கூர் பகுதியில் போலி மருத்துவம் பார்த்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் சேர்ந்த சித்த மருத்துவர் அறிவழகன் (52), கடந்த 15 ஆண்டுகளாக மதுக்கூர் பேருந்து நிலையம் அருகே கிளினிக் நடத்தி வருகிறார். சித்த மருத்துவம் படித்துள்ள அறிவழகன் தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருவதாக எழுந்த புகாரின்பேரில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் திலகம் தலைமையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பழகன் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரது மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர்.

Continues below advertisement

அப்போது, மருத்துவர் அறிவழகனின் கல்விச் சான்றிதழ்களை பரிசோதனை செய்தனர். இதில் அறிவழகன், சித்த மருத்துவம் படித்துவிட்டு, ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது. மேலும், அவரது மருத்துவமனையில் ஆங்கில மருந்துகள் விற்பனை செய்யும் மருந்தகம், எக்ஸ்-ரே, இசிஜி வசதிகள் மற்றும் உள் நோயளிகளுக்கான 9 படுக்கைகள் இருந்தன.

தொடர்ந்து மருத்துவமனை முழுவதும் சோதனை செய்த போது, இரண்டு பெரும் பைகளில் 1.12 கோடி ரொக்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். பணம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து,  வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இரவு முழுவதும் அறிவழகனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம், புதிதாக இடம் வங்க வைத்துள்ளதாக அறிவழகன் தெரிவித்தார். இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதை போல, மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, மாதவன் (50), என்பவர் நடத்தி வரும் மருத்துவமனையில் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மாதவன், அந்த மருத்துவமனையை 15 ஆண்டாக நடத்தி வருவதும், வெறும் ப்ளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையெட்டுத்து போலி மருத்துவர்களாக இருந்த அறிவழகன் மற்றும் மாதவன் இருவரையும் மதுக்கூர் காவல்துறையினர் கைது செய்தனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola