தஞ்சாவூர்: பர்ஸ்ட் கண்ணா... நான்தான் டாப் 1 என்று திருச்சி கெத்து காட்டியுள்ளது. எதில்? எதற்காக தெரியுங்களா?

Continues below advertisement

தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அந்த வகையில், மாவட்டம் வாரியாக சுற்றுலாப் பயணிகள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் டாப் 1 எந்த சிட்டி தெரியுங்களா?

ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டில் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் 23.09 லட்சம் சுற்றுலாப் பயணிகள் திருச்சியைத் தேர்வு செய்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக, திருச்சி நகரின் ஆன்மீக, வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் குறிப்பிடப்படுகிறது. ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மலைக்கோட்டை கோயில் போன்ற புகழ்பெற்ற தலங்கள் பக்தர்களையும் வரலாற்று ஆர்வலர்களையும் ஈர்க்கின்றன.

Continues below advertisement

மேலும், திருச்சியின் போக்குவரத்து வசதிகள் மிகச் சிறந்தவையாக சுற்றுலாப்பயணிகளுக்கு அமைந்துள்ளது. அதன்படி ரயில் போக்குவரத்து, சாலை மற்றும் விமான போக்குவரத்து ஆகியவை சுற்றுலாப்பயணிகளை எளிதாக சிட்டிக்குள் வர செய்கிறது. திருச்சியின் சுற்றுலா தளம், மரபு உணவுகள், சந்தைகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஆகியவை பயணிகளை கவரும் முக்கிய அம்சங்களாக செயல்படுகின்றன. இவை அனைத்தும் திருச்சியை மாநிலத்தில் சுற்றுலா வருகை கணக்கில் முதலிடத்தில் நிலைநிறுத்தியுள்ளது. கெத்து காட்டி விட்டது திருச்சி.

மதுரை மாவட்டம் ஆகஸ்ட் மாதத்தில் 21.65 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் போன்ற வரலாற்று மற்றும் ஆன்மீக தலங்கள் மக்கள் வருகைக்கு முக்கிய காரணமாக உள்ளன. அதனைத் தொடர்ந்து, 21.10 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் தூத்துக்குடி மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலுக்கான வருகை காரணமாக 20.16 லட்சம் பயணிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் மதுரை 1.53 லட்சம் பேருடன் முதலிடத்தில் உள்ளது. இது மதுரையின் சர்வதேச புகழையும், ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது. 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அளவில் திருச்சி மாவட்டம் மாநிலத்தில் அடுத்த முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச விமான நிலைய வசதி, உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச்சின்னங்கள் வெளிநாட்டினரின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய காரணங்களாக உள்ளன. அதேசமயம், இராமநாதபுரம் மாவட்டம் ஆன்மீக முக்கியத்துவம் அதிகமாக இருந்தாலும், வெளிநாட்டு பயணிகள் வருகை 3,501 பேராக மட்டுமே பதிவாகி, இந்தப் பிரிவில் பின்தங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் 15 லட்சம் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. உலக பாரம்பரியச் சின்னமான பெரிய கோயில் மற்றும் சோழர் வரலாறு இதற்குக் காரணமாகும். அதுபோல, திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு 14.71 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, அந்த மாவட்டத்தின் சுற்றுலா முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த மாவட்டமாக திருச்சி முதலிடம் பெற்றுள்ளது. ஆன்மீகமும் வரலாற்றும் கலந்த முக்கிய தலமாக விளங்கும் திருச்சி, ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் போன்ற புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களால் பக்தர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

மேலும், ரயில், சாலை, விமானம் என அனைத்து போக்குவரத்து வசதிகளும் சிறப்பாக இருப்பதால், மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் வருகை தருகின்றனர். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திருச்சியைச் சுற்றி வந்துள்ளனர். அதேபோல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை, நாகை போன்ற மாவட்டங்களும் ஆன்மீகம், கடற்கரை, வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் இயற்கை அழகின் காரணமாக சுற்றுலா வருகையில் முன்னணி இடங்களைப் பெற்றுள்ளன.

திருச்சி மாவட்டம் பாரம்பரியம், ஆன்மீகம் மற்றும் வரலாறு ஆகியவை ஒருங்கிணைந்த நகரமாக விளங்குகிறது. சோழர், நாயக்கர் காலங்களை நினைவூட்டும் வரலாற்றுச் சின்னங்கள் இன்றும் திருச்சியின் அடையாளமாக உள்ளன. மலைக்கோட்டை கோயில் போன்ற தொன்மையான கட்டிடக்கலை சிறப்புகள் வரலாற்று ஆர்வலர்களை பெரிதும் ஈர்க்கின்றன.

அதேபோல், ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் போன்ற புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்கள் ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை வரவழைக்கின்றன. திருவிழா காலங்களில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. ரயில், சாலை, விமானம் ஆகிய அனைத்துவிதமான போக்குவரத்து வசதிகளும் சிறப்பாக இருப்பதால், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் திருச்சியை வந்தடைந்து பார்வையிட முடிகிறது. இதுவே திருச்சியை சுற்றுலா வருகையில் முன்னணி மாவட்டமாக மாற்றியுள்ளது.