வரும் 26ம் தேதி குடியரசு தின கலைநிகழ்ச்சிக்காக நாட்டுப்புற நடனம், கோலாட்டம், கும்மி என்று பரபரப்பாக பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தனர் வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள். தஞ்சை அருகே வல்லத்தில் இயங்கி வருகிறது அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகின்றனர். 1082 மாணவிகளுடன் இப்பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. இப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனர். இந்நிலையில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க இப்பள்ளியை சேர்ந்த 56 மாணவிகள் தேர்வாகி உள்ளனர். ஆண்டுோறும் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினத்தை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் தஞ்சை மாவட்டத்தை பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். அந்த வகையில் வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த இந்த மாணவிகள் நம் பாரம்பரிய நடனமான நாட்டுப்புற நடனங்களை கலைநிகழ்ச்சியில் செய்து காட்ட உள்ளனர். இதற்காக திருப்புதல் தேர்வு நடந்து வரும் நிலையில் ஒரு பக்கம் தேர்வு மறு பக்கம் பயிற்சி என்று தங்களின் திறமைகளுக்கு பட்டைத்தீட்டுகின்றனர். இம்மாணவிகள் கரகம், காவடியாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் என நாட்டுப்புற நடனங்களை பயிற்சி எடுத்தனர்.
குடியரசு தின கலைநிகழ்ச்சியில் பங்கேற்க பயிற்சி பெறும் வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள்
என்.நாகராஜன் | 23 Jan 2023 05:00 PM (IST)
முக்கியமாக இப்பள்ளியை சேர்ந்த மாணவி கனிமொழியின் அட்டகாச குரலில் ஒலிக்கும் நாட்டுப்புறப்பாடலுக்கு பயிற்சி எடுத்தனர்.
பயிற்சி பெறும் மாணவிகள்
Published at: 23 Jan 2023 05:00 PM (IST)