தஞ்சாவூர்: அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


அதிமுக 53ம் ஆண்டு தொடக்க விழா


அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் அமைந்து மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக தொண்டர்கள் உற்சாகமாக வெடி வெடித்து கொண்டாடினர். 


மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்


நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மா.சேகர் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து கோஷம் எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம்,  விவசாய பிரிவு இணை செயலாளர் ராஜமாணிக்கம், துணை செயலாளர் சிங்.ஜெகதீசன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் துரை.வீரணன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அறிவுடைநம்பி, பகுதி செயலாளர்கள் கரந்தை பஞ்சு, புண்ணியமூர்த்தி, மனோகர், சதீஸ்குமார், மருத்துவப்பிரிவு துணை செயலாளர் துரை.கோ.கருணாநிதி, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன்.


மாவட்ட மருத்துவரணி செயலாளர் சங்கர், முன்னாள் மேயர் சாவித்திரி, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் வெண்ணிலா பாலைரவி, மாவட்ட பொருளாளர் அன்பு செல்வன், மகளிர் அணி சித்ராஅங்கப்பன், மத்திய ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் பூபதி, குடந்தை அரசு போக்குவரத்து கழகம் மண்டல செயலாளர் திருநீலகண்டன்,  தகவல்தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் நடராஜன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கதிரவன், நீலகிரி ஊராட்சி பிரதிநிதி சண்முகசுந்தரம், ஒன்றிய அவைத்தலைவர் சந்தானம்,   கவுன்சிலர்கள் கோபால், தெட்சிணாமூர்த்தி, காந்திமதி, கலைவாணி, மாணவரணி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள், பஸ் பயணிகள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.  தொண்டர்கள் உற்சாகமாக வெடி வெடித்து மகிழ்ந்நதனர்.


அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவினர் மாலை அணிவிப்பு


இதேபோல் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் அ.தி.மு.க 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தஞ்சாவூா் ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தவமணி முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சண்முக பிரபு, ரமேஷ், சுவாமிநாதன், முத்துசாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்லத்துரை,  மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் டாரத்தி கிரேஸி, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் மணிகண்டன், கவுன்சிலர் சரவணன், அம்மா பேரவை துணை செயலாளர் ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரராஜ், மாநில நிர்வாகி துரைப்பாண்டியன்‌ உள்பட பலர் கலந்து கொண்டனர்.