தஞ்சை- புதுக்கோட்டை வழித்தடத்தில் குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 2 கரும்பு ஆலைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 2022 – 23 ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவம் கடந்த நவம்பர் 23ம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. தற்போது அரவை பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில், கரும்பாலை கழிவுகளை சேமித்து வைக்கக்கூடிய பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர் திடீரென நேற்று இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகள் அருகில் அமைக்கப்பட்டு இருந்த ட்ரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதில், ட்ரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் மின்சாரம் தடைப்பட்டு அரவை பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. அரவைக்கு கொண்டு வந்த கரும்புகள் தேக்கமடைந்தது. இருப்பினும் சுவர் விழுந்த பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் இல்லை. தொடர்ந்து சேதமடைந்த ட்ரான்ஸ்பார்மை பணியாளர்கள் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை சுவர் இடிந்து விழுந்தது - அரவைப்பணிகள் நிறுத்தம்
என்.நாகராஜன் | 22 Dec 2022 04:55 PM (IST)
தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை சுவர் இடிந்து ட்ரான்ஸ்பார்மரில் விழுந்தது. இதனால் நேற்று அரவை பணிகள் நிறுத்தப்பட்டன.
இடிந்து விழுந்த சர்க்கரை ஆலை சுவர்
Published at: 22 Dec 2022 04:55 PM (IST)