4 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற நாகை மீனவர்கள்
மீன்வளத்துறையினர் அனுமதியை அடுத்து கடலில் அதிக மீன் கிடைக்கும் என நம்பிக்கையில் 4 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற நாகை மீனவர்கள்.
Continues below advertisement

கடலுக்கு செல்லும் மீனவர்கள்
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடல் சீற்றம் மற்றும் கடல் காற்று காரணமாக கடலுக்கு செல்லாமல் இருந்த நாகை மீனவர்கள், மீன்வளத்துறையினர் அனுமதியை அடுத்து கடலில் அதிக மீன் கிடைக்கும் என நம்பிக்கையில் 4 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் நேற்று சென்றனர்.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 1ம் தேதி மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில் இலங்கை அருகே புயல் கரையை கடந்ததை தொடர்ந்து கடல் சீற்றம் தணிந்தது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறை சார்பாக டோக்கன்கள் வழங்கும்படி தொடங்கியது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அக்கரைப்பேட்டை நாகூர், சாமந்தன்பேட்டை, நம்பியார்நகர், செருதூர், வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம், ஆற்காட்டு துறை உள்ளிட்ட 27 மீனவ கிராமத்து சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு என 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அடிக்கடி இயற்கை சீற்றம் மற்றும் இலங்கை கடற்படை படையினால் பாதிக்கப்படும் தங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு வழங்குவதோடு மானிய டீசலை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.