மணிப்பூர் பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை  மற்றும் கலவரத்தின்  உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என நாகையில் செல்போன் டார்ச் லைட்டை ஒளிரவிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தி பெரிய அளவில் கலவரம் நடைபெற்று வருகிறது. அந்த கலவரத்தின்போது பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தும், இளைஞர்களை வெட்டி கொன்றும்  கலவரக்காரர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழங்குடி பெண்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து வந்து ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 77 நாட்களுகுக்குப் பிறகு சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்டுமிராண்டித் தனமான செயலை கண்டித்து பல்வேறு அமைப்புகள் கண்டனங்களையும், போராட்டாங்களையும் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை ரயில் நிலையம் முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஓ.எஸ். இப்ராஹிம் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்காத மணிப்பூர் பா.ஜ.க அரசு உடனடியாக பதவி விலகி வேண்டும், கலவரத்தில் பாதிக்கப்பட்டு வீடுகள் இழந்த அனைவருக்கும் உடனடியாக வீடுகள் கட்டிக் கொடுத்து அவர்களை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், கோர செயலில் ஈடுபட்ட கயவர்களை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் கலவரத்தின் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தங்களது செல்போன் டார்ச் லைட்டை ஒளிரவிட்டபடி மத்திய மோடி அரசுக்கு எதிராகவும், மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண