தஞ்சாவூர் அருகே கண்டியூரில் கால்நடை மருந்தகக் கட்டடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள், மனுக்களை தொடர்ந்து, கடந்த ஆண்டு மக்கள் நலனுக்கான பல்வேறு அடிக்கல்லை முதல்வர் நாட்டினார். இதேபோல, ஏறத்தாழ 40,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். மனுக்கள் அடிப்படையிலும், மாவட்ட நிர்வாகத்துக்கு வருகிற கோரிக்கைகள் அடிப்படையிலும் அந்தந்த பகுதிக்குத் தேவையான கட்டடங்களை, குறிப்பாக விவசாயிகளுக்குத் தேவையான கட்டடங்களைத் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி பூதலூர், திருவையாறு, பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களில் ரூ. 2.27 கோடி மதிப்பில் அங்கன்வாடி உள்பட 9 கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்து, கட்டுமான பணி முடிவடைந்த கட்டடங்களையும் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. இதுபோல, மக்களுக்குத் தேவையான பணிகளைத் தமிழக அரசு உடனுக்குடன் மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூக தீர்வு காணப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
என்.நாகராஜன் | 13 Dec 2022 04:48 PM (IST)
திருவையாறு புறவழிச்சாலை பிரச்னை குறித்து கண்டிப்பாக மாவட்ட நிர்வாகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களில் நடந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ்
Published at: 13 Dec 2022 04:48 PM (IST)