தஞ்சாவூர்: எம்.ஜி.ஆர். 37ம் ஆண்டு நினைவு தின அஞ்சலி - அமைதி ஊர்வலம் சென்ற தொண்டர்கள்!

அமைதி ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சாவூர் ரயில் நிலையம் பகுதிக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Continues below advertisement

தஞ்சாவூர்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 37ம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி தஞ்சாவூர் ரயில் நிலையம் பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

Continues below advertisement

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 37-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து மத்திய மாவட்ட அ.தி.மு.க செயலாளர்  மா. சேகர் தலைமையில், மாநகர செயலாளர் என்.எஸ்‌. சரவணன் முன்னிலையில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள்  அமைதி ஊர்வலமாக புறப்பட்டு ரயில் நிலையம் பகுதிக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இதில் மாநில அமைப்பு செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை திருஞானம், விவசாய பிரிவு இணை செயலாளர் ராஜமாணிக்கம், துணைச் செயலாளர் சிங்.ஜெகதீசன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அறிவுடைநம்பி, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் துரை.வீரணன், மருத்துவப் பிரிவு இணைச்செயலாளர் துரை கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாவித்திரி, மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சங்கர், மாவட்ட பொருளாளர் அன்புச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் வெண்ணிலா பாலை ரவி, பகுதி செயலாளர்கள் கரந்தை பஞ்சு, புண்ணியமூர்த்தி ,மனோகரன், சதீஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ஸ்டாலின் செல்வராஜ், தங்கதுரை, கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மண்டல செயலாளர் திருநீலகண்டன், முன்னாள் கவுன்சிலர் பூபதி, மகளிரணி சித்திரா அங்கப்பன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் மனோகரன், முன்னாள் பகுதி துணை செயலாளர் தாஸ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் நடராஜன் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கதிரவன்,  கவுன்சிலர்கள் கோபால், தெட்சிணாமூர்த்தி, காந்திமதி, கேபிள் செந்தில், நீலகிரி ஊராட்சி பிரதிநிதி சண்முகசுந்தரம்,  ஒன்றிய அவைத் தலைவர் சந்தானம், மாணவர் அணி முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தவமணி தலைமையில் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் துரை முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் ஒன்றிய செயலாளர்கள் சத்யராஜ், மணிவண்ணன், பாவா, செந்தில், அரசு, பாலா, பகுதி செயலாளர்கள் சண்முகபிரபு, ரமேஷ், சுவாமிநாதன், முத்துசாமி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ், மகளிர் அணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் டாரத்தி கிரேஸி,  மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், கவுன்சிலர் சரவணன், முன்னாள் கவுன்சிலர்கள் செல்லத்துரை,  ராஜா, மாணவர் அணி செயலாளர் குமரகுரு, வட்ட செயலாளர்கள் கார்த்தி, சேகர், ராஜா மற்றும் ஏராளமான தொண்டர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola