வரும் 7ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறைங்கோ!!! எதற்காக தெரியுமா..?

தினமும் மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மண்டகபடிதாரர்கள் சார்பில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Continues below advertisement

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கோயில் தேர்திருவிழா வரும் 7ம் தேதி நடக்கிறது. இதை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 7ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதையடுத்து கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் கொடியேற்றினர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று காப்பு கட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து தினமும் மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் மண்டகபடிதாரர்கள் சார்பில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 7-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. 

ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் 7ம் தேதி தேர் திருவிழா நடப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 19ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் அறிவிக்கப்பட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola