நெல்லின் ஈரப்பதத்தை 21 சதவீதமாக உயர்த்துவது குறித்து இந்திய உணவு கழகத்தின் அனுமதி பெற்ற பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வீடு அற்றவர்களுக்கான வீடு வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இதில் 1168 பயனாளிகளுக்கு 11 கோடியே 59 லட்சத்து 17 ஆயிரத்து 865 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சக்கரபாணி ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், “நெல்லின் ஈரப்பதம் 21% வேண்டும் என விவசாயிகளும் பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோன்று சென்ற ஆண்டும் இதே கோரிக்கை வந்தது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவெடுக்க முடியாது. இந்திய உணவுக் கழகம் அனுமதி கொடுத்தால் தான் 21% ஈரப்பதத்துடன் நெல்லை வாங்க முடியும். ஆனால் அதற்காக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அங்குள்ள அதிகாரிகள் இங்கு வந்து பார்த்துவிட்டு ஈரப்பதம் 21% வாங்கலாமா அந்த அளவுக்கு இங்கு மழை பெய்து இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு அவர்கள் டெல்லி சென்று அனுமதி கொடுத்த பிறகுதான் அதை வாங்க முடியும்.
நெல்லின் ஈரப்பதம் 21% ஆக உயர்வு; இந்திய உணவு கழக அனுமதிக்கு பின் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி
கு.ராஜசேகர் | 30 Sep 2022 02:48 PM (IST)
திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் 15 நாட்களில் குடும்ப அட்டை தருவோம் என்று கூறினோம். ஆட்சிக்கு வந்து 17 மாதங்களில் இதுவரை தமிழகம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சக்கரபாணி
Published at: 30 Sep 2022 02:47 PM (IST)