Just In

9 ஆயிரம் கோடி கடன்...மோசடி செய்தது வங்கிகள்தான்...பரபரப்பை கிளப்பிய மல்லையா பாட்காஸ்ட்

நாளை வைகாசி கடைசி முகூர்த்தம்.. காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்.. களைகட்டும் தமிழ்நாடு!

அவரது இசையே அருமருந்து.. இசைஞானியை சந்தித்தது வாழ்நாள் பாக்கியம்.. அண்ணாமலை நெகிழ்ச்சி

நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்
தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules
நீரின்றி வறண்டு கிடக்கும் பயிர்கள்; குடத்தில் தண்ணீரை தெளிக்கும் அவலம் - நாகையில் விவசாயிகள் வேதனை
தண்ணீர் இன்றி வரண்டு கிடக்கும் பயிர்கள். குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்.
Continues below advertisement

குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்
தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்களை காப்பாற்ற குளம் குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை கொண்டு நாகை விவசாயிகள் தெளிக்கின்றனர். காவிரி நீர் கை கொடுத்தால் தான் சம்பா சாகுபடியும் தொடங்க முடியும் கடைமடை விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் 50000 ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 40,000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் போதுமான அளவு கடைமடை வந்து சேராத காரணத்தால் ஆற்றில் தடம் பதித்த காவிரி நீர் பல்வேறு கிராமங்களில் வாய்க்கால் மற்றும் பயிர்களுக்கு போதுமான அளவு சென்று சேராததால் தண்ணீரின்றி சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை தாலுகாவில் சங்கமங்கலம், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு முறை மட்டுமே தண்ணீர் வந்ததாகவும் இதனால் குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி வளராமல் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதேபோல் கீவலூர் தாலுகாவில் நெம்மேலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் தண்ணீர் இன்றி வயல்கள் வெடித்தும் பயிர்கள் காய்ந்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்த விவசாயிகள், அருகில் உள்ள குளம் குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை எடுத்து வந்து இளம் பயிரை காப்பாற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சில விவசாயிகள் பயிர்களை காப்பாற்றும் நம்பிக்கை இன்றி தங்களது கால்நடைகளையும் பயிர்களில் மேச்சலுக்கு விடுகின்றனர். நேரடி விதைப்பில் ஈடுபட்டு ஒரு மாத காலமான நிலையில் பயிர்கள் வளர்வதற்கு போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் வளர்ச்சி அடையாமல் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பயிரை காப்பாற்ற உடனடியாக முறையின்றி தண்ணீர் வழங்க வேண்டும், காப்பாற்ற முடியாத குறுவை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.