தஞ்சாவூர்: மிகப் பழமை வாய்ந்த தஞ்சாவூர் சிங்கப்பெருமாள் கோயில் குளம் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டையுடன் உள்ளது இதை உடன் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சையில் அமைந்துள்ளது மிக பழமையான சிங்கப்பெருமாள் குளம். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த குளத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீன் வளர்ப்பிற்காக ஏலம் விடப்படு முறையான பராமரிப்போடு இருந்தது. கோடைகாலம் ஆனாலும் வற்றாமல் எப்போதும் தண்ணீர் இந்த சிங்கப்பெருமாள் கோயில் குளத்தில் இருந்து கொண்டே இருக்கும். தற்போது மீன் வளர்ப்பு ஏதும் நடைபெறாததால் இக்குளம் தொடர்ந்து பல மாதங்களாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. முக்கியமாக இப்பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் குளத்தில் அதிகளவில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் குளத்தின் தெற்கு கரையில் வசிக்கும் ஒரு சிலரால் சிங்கப்பெருமாள் குளத்தில் நேரடியாக கழிவுநீர் கலக்கப்படுகிறது என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
பழம்பெருமை வாய்ந்த தஞ்சை சிங்கப்பெருமாள் கோயில் குளத்தில் கொட்டப்படும் குப்பைகள்... கலக்கப்படும் கழிவு நீர்
என்.நாகராஜன் | 28 Apr 2023 06:31 PM (IST)
இந்தக் குளத்தின் தெற்கு கரையில் வசிக்கும் ஒரு சிலரால் சிங்கப்பெருமாள் குளத்தில் நேரடியாக கழிவுநீர் கலக்கப்படுகிறது என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
குளத்தில் குவிந்து இருக்கும் குப்பைகள்.
Published at: 28 Apr 2023 06:31 PM (IST)