குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டு பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.
நாகை மாவட்டம் நாகூர் அருகே வடக்கு பால்பண்ணைசேரியை சேர்ந்தவர் பாஸ்கரன் இவரது வீட்டின் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வடக்கு புறம் மற்றும் மேற்கு புறத்தில் மூங்கில் மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இங்கு நல்லபாம்பு, சாரைப் பாம்பு, கருநாகம் மற்றும் நட்டுவாக்களி தேள் ஏராளமான உள்ளது. இந்த பகுதியில் அவ்வப்போது பாம்புகள் அங்கிருந்து தப்பி குடியிருப்பு பகுதிகளில் தஞ்சமடைய தொடங்கியுள்ளது. ஒரு வருடத்தில் இப்பகுதியில் சுமார் 17 மேற்பட்ட பாம்புகளை தீயணைப்பு துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளனர்.
தொடர்ந்து விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தனியாருக்கு சொந்தமான மூங்கில்களை வெட்ட உத்தரவிட்டு தங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்