இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து திமுகவினர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக, தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட திமுக மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை தஞ்சாவூர் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் வரவேற்றார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இரா.தெட்சிணாமூர்த்தி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் து.செல்வம்,மகேஷ் கிருஷ்ணசாமி, கும்பகோணம் மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன், தஞ்சாவூர் மாநகர துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா அலுவலக மொழி தொடர்பாக அளித்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்ற கொள்கையை பாஜக கைவிட வேண்டும். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியா முழுவதும் இந்தி மொழியை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இந்தி மொழி திணிப்பை கண்டித்து தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம்
என்.நாகராஜன் | 15 Oct 2022 05:55 PM (IST)
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்
Published at: 15 Oct 2022 05:55 PM (IST)