சேலம் மாவட்டம் முள்ளுவாடிகேட், மறைமலை அடிகள் தெருவைச் சேர்ந்தவர் 46 வயதான பாப்பாத்தி. இவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணியற்றி வந்துள்ளார். கணவரைப் பிரிந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக தாயார் வீட்டில் கல்லூரியில்  பயின்று வரும் தனது மகள் மற்றும்  மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி காலை 2-வது அக்ரஹாரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் பாப்பாத்தி  உயிரிழந்தார் என சொல்லப்பட்டது. விபத்து தொடர்பாக டவுன் காவல் ஆய்வாளர் மோகன்பாபு கண்ணா மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.




தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் அவர் சம்பவத்திற்கு முன் அந்த வழியாக வந்த பேருந்து ஒன்றின் முன் விழுவதற்கு ஓடிச் சென்றிருக்கிறார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்திருக்கிறது. அதில் மோதி கீழே விழுந்த பாப்பாத்தி, 2-வதாக வந்த பேருந்தின்முன் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. காவல்துறை தரப்பில் விபத்து என்று முதலில் வழக்கு பதிவுசெய்த நிலையில், இந்த விபத்துக்கு நான் காரணம் இல்லை என்று ஓட்டுநர் தெரிவித்திருந்தார்.  தற்போது சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்தபோது பாப்பாத்தி தானாகவே பேருந்தின்முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டது பதிவாகியிருக்கிறது. 


TASMAC Extra 10 Rs: இனிமே பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தால் சஸ்பெண்ட்.. டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்ட




இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில், பாப்பாத்தியின் மகள், மகன் ஆகிய இருவரும் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இருவருக்கும் கல்லூரி படிப்புக்கான கட்டணத்தைக் கட்ட முடியாதநிலை இருந்துவந்ததாகவும், வறுமையில் வாழ்ந்து வந்த அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அதனால் விபத்தில் இறந்தால் நிவாரண பணம் கிடைக்கும் என்று யாரோ கூறியிருக்கின்றனர். அதனை தொடர்ந்து பேருந்தின்முன் பாய்ந்து இறந்தால் நிவாரணத்தொகை கிடைக்கும். அதில் தன் குழந்தைகள் படித்து முன்னேறி கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


NTA NCET 2023: ஆசிரியர் பணியில் சேர தேசிய பொது நுழைவுத் தேர்வு; விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்




இந்நிலையில் சேலத்தில் பேருந்தில் மோதி உயிரிழந்த பெண் தூய்மை பணியாளர் பாப்பாத்திக்கு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கினர்.  மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாப்பாத்தியின் உருவப்படத்துக்கு, மலர் தூவி, கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் பலர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது. தொடர்ந்து இந்த மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை தொழிலாளர்கள் 95 பெரும் இணைந்து தங்கள் பங்களிப்பாக பாப்பாத்தியின் குடும்பத்தினருக்கு 10,000 ரூபாய் நிதி உதவியை வழங்கினர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.