கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வெளிமாநிலங்கள், வெளி நாட்டிலிருந்து வருவோருக்கு இபாஸ் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.




அதே நேரத்தில் மூன்று மாநிலங்களிலிருந்து தமிழகம் வர இபாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு இபாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில, வெளிநாடுகளிலிருந்து வருவோர் https://eregister.tnega.org என்ற முகவரில் இபாஸ் பெறலாம்.