2026ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் அதிமுக ஆட்சிக்கு வருவது உறுதி என்று தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பழைய ஓய்வூதியத் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த உடன் கொண்டு வரப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக அரசின் திட்டங்களுக்கு, திமுக ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி சாடி உள்ளார்.
மின் கட்டணம், வரி உயர்வு, நிர்வாக சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகளால் தமிழகம் இருள் அடைந்துள்ளதாகவும் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.