தமிழ்நாட்டில் இன்று முதல் அனைத்து கோயில்களும் திறக்கப்பட உள்ள நிலையில், பல முக்கிய திருத்தலங்களில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் இன்று முதல் அனைத்து கோயில்களும் திறக்கப்பட உள்ள நிலையில், பல முக்கிய திருத்தலங்களில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை பரிசோதிக்கப்பட்டு கிருமிநாசினி அவர்கள் கைகள் தெளிக்கப்பட்டபின்பு தனிமனித இடைவெளியுடன் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.




மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மற்றும் மயிலம் முருகன் கோவில் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில், புத்துப்பட்டு அய்யனாரப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும்  அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு, பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், கோயில்களில் தினமும் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. கோயில்களில் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.




இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த தளர்வில் கோயில்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. அதன்படி, கடந்த வாரம் சில மாவட்டங்களில் கோயில்கள் திறக்கப்பட்டன. கடந்த 2ஆம் தேதி தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகளின்படி, தமிழ்நாட்டில் நாளை முதல் அனைத்து கோயில்களும் திறக்கப்பட உள்ளது. இதனால், தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.




தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறப்படுவதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயில்களில் தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோயில்களில் பணி செய்யும் பணியாளர்கள் கோயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், மசூதிகள், கிறிஸ்துவ ஆலயங்களில் வழிபாடு நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலில் வழிபட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கோயிலில் இன்று 5-ஆம் தேதி முதல் காலை 6-12.30 மற்றும் மாலை 4-8 வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயிலில் நடைபெறும் காலபூஜை, அபிஷேகங்களை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை.