விழுப்புரம் நகராட்சியில் கலைஞர் உரிமை தொகைக்கான விண்ணப்பிக்கும் முகாமில் அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனி, திமுக எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆய்வு செய்தனர். அப்போது பதிவு செய்ய வந்த பெண்ணிடம் அமைச்சர் பொன்முடி 1000 ரூபாய் யார் தருகிறார்கள் என கேட்டார். அதற்கு மொளனமாக இருந்த பெண், “நான் எப்பவும் இரட்டை இலை தான்” எனக் கூறி அமைச்சர் பொன்முடியை நோஸ்கட் செய்தார். அதன் பின்னர் பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி திமுக நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எந்த கட்சியும் வேறுபாடின்றியும், ஜாதி மத வேறுபாறுபாடின்றி கலைஞர் உரிமை தொகையை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க  உத்தரவிட்டுள்ளதால் அனைவருக்கும் வழங்கப்படுமென அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுமென கூறினார்.


தக்காளி விலையை மோடியிடம் கேள் ?


அரகண்டநல்லூர் பேரூராட்சில் நடைபெற்ற முகாமினை பார்வையிட்ட  அமைச்சர் பொன்முடி அங்கு இருந்த பொதுமக்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அனைவரும் கையில் வைக்கப்பட்டுள்ளதா, எவ்வளவு பணம் அரசு வழங்க உள்ளது தெரியுமா, உங்களுக்கெல்லாம் வீடு கார் இதுபோன்று ஏதேனும் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அதன்பின்னர் இந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை யார் தருகிறார்கள் என தெரியுமா என கேட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்மணி ஒருவர் தக்காளியின் விலை 100 ரூபாயாக உள்ளது அதனை குறைக்க வேண்டும் என கேட்டார்.  அதற்கு அமைச்சர் பொன்முடி, மோடியிடம் போய் கேளுங்கள் விலைவாசி ஏறும் இறங்கும் நாங்கள் தான் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே அது மகிழ்ச்சியா இல்லையா என கேள்வி கேட்ட பெண்னை பார்த்து கூறிவிட்டு நாங்கள் தான் ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் தக்காளி கொடுக்க நடவடிக்கை எடுத்தோமோ என தெரிவித்தார். அதன் பின்னர் அந்த பெண் தனக்கு ஓட்டு போடவில்லை என்றும்  யாராவது சொல்லிக் கொடுத்து பேசுவார் என கூறிவிட்டு அமைச்சர் பொன்முடி சென்றார்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.