விழுப்புரம்: ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு செஞ்சியில் வாரச்சந்தையில் ரூ.4 கோடி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. வெளி மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர்.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் காய்கறி, ஆடு, மாடு சந்தை கூடுவது வழக்கம். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை ஒட்டி இந்த வார வெள்ளிக்கிழமை வார சந்தையில் ஆட்டு சந்தை கூடியது. இதில் செஞ்சியை சுற்றியுள்ள  கிராமங்களிலும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பையும் செய்து வருகின்றனர். செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகள் மலைப்பகுதி மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் ஆடுகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. செஞ்சி வாரசந்தை புகழ்  பெற்ற ஆடு, மாடு விற்கும் மையமாக 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒரு மையப் புள்ளியாக செயல்பட்டு வருகிறது.


செஞ்சி சந்தைமேடு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச் சந்தையில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் வரும் (நாளை) சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டப்படவுள்ளது. அதிகாலை 3 மணிக்கே விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர். அதேபோல் செங்கம், திருவண்ணாமலை, வேலூர், சேத்துப்பட்டு, ஆரணி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகளும் ஆடுகளை கொண்டு வந்தனர். மேலும் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம் வேலூர் தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மினி லாரிகளில் நேற்று முன்தினமே வந்து விட்டனர். ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர்.


வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பேறு பெற்றதால் இங்கு வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.  ஒரு செம்மறி ஆடு (15 கிலோ எடை) கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ரூ. 9 முதல் 11  ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. மற்ற வகை ஆடுகள் ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டன. வாரச்சந்தையில் ரூ. 5 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. வியாபாரிகள் மகிழ்ச்ச்சியுடன் ஆடுகளை வாங்கிச்சென்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண