கோவை கொடிசியா மைதானத்தில் இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.


இந்த விழாவில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்பிக்கள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன், "மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். அதற்கு முதல் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார். 


"மழைக்கால தவளை போன்று ஒருவர் கத்திக் கொண்டு இருக்கிறார்" நாடே வியந்து பார்க்கும் அளவிற்கு ஸ்டாலின் ஆட்சியை நடத்தி வருகிறார். கேரளாவில் ஒரு நடிகரை வைத்து பாஜக ஒரு இடத்தை பெற்றுள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடு தான். 


எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை. தேசிய தலைவர்கள் அனைவரையும் அழைத்து ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும். அவர் தொடர் வெற்றியை பெற்று வருகிறார். இதற்கு காரணம் ஸ்டாலினின் ஆளுமை தான்.


ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறும். அப்படி பட்ட கூட்டணி தான் அதிமுக பாஜக கூட்டணி. நான்கு தேர்தல்களை சந்தித்தும் கூட்டணியில் சிதைவு இல்லை. மழைக்கால தவளை போன்று ஒருவர் கத்திக் கொண்டு இருந்தார். தாமரை மலரும் , தாமரை மலறும் என்று.


திராவிட அரசியல், இந்த கூட்டணி தோல்வி அடையும் என சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால், நான் பார்த்துக் கொள்கிறேன் என நேரடியாக களம் கண்டார் ஸ்டாலின். திருமாவளவன் எதிராக பரப்பபடும் கருத்துகளுக்கு பொருட்படுத்தாமல் அனைத்து அமைச்சர்களை வேலை செய்ய வைத்தவர் முதல்வர்.


திமுகவின் முப்பெரும் விழா: இந்தியா முழுவதும் பயணம் செய்து அரவிந்த கெஜ்ரிவால் இந்தியா கூட்டணி கொண்டு வந்தவர். அகில இந்திய அளவில் கூட்டணி உருவாக்க முயற்சி செய்தார் ஸ்டாலின் தான். பொறுப்புணர்வுடன் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என செயல்பட்டார் முதல்வர்.


பாஜகவை தனிமை படுத்த கூட்டணியை உருவாக்கினார். 40 நமதாக இருக்கலாம். ஆனால், நாடு இன்னும் நம்முடன் இல்லை. ஆனால், தமிழ்நாடு நம்முடன் தான் உள்ளது. தேசிய அளவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும். இன்னும் வியூகம் வகுக்கும் நேரம் உள்ளது. 


எதிர்கட்சிகள் தெறித்து ஓடுகிறார்கள். அதிமுக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்து உள்ளனர். மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோவையில் வெற்றி பெற்றோம். இந்தியா கூட்டணி உருவாக அடித்தளம் ஈட்டவர் முதல்வர். இந்தியா கூட்டணி இன்னும் வலிமை பெற வேண்டியுள்ளது" என்றார்.