தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 120 எண்ணிக்கையிலான காற்றாலை இறகுகளை ஒரே கப்பலின் மூலம் இறக்குமதி செய்து சாதனை படைத்துள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட காற்றாலை இறகுகள் அங்குள்ள சாங்ஷ(Changshu) துறைமுகத்தில் இருந்து MV.NAN FENG ZHI XING என்ற கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலில் கொண்டுவரப்பட்ட 76.8 மீட்டர் நீளம் கொண்ட 120 காற்றாலை இறகுகளும் 44 மணிநேரத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட காற்றாலை இறகுகளைக் இரண்டு பெரியநகரும் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பாக கையாளப்பட்டன. இக்காற்றாலை இறகுகள் நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கிவரும் காற்றாலை பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட காற்றாலை இறகுகளில் இதுதான் அதிக எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 60 காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து சாதனை படைத்த நிலையில் தற்போது 120 காற்றாலை இறகுகளை ஒரே கப்பலில் இருந்து இறக்குமதி செய்து வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காற்றாலை இறகுகளை சிறப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் கையாண்டு இச்சாதனை புரிவதற்கு உறுதுணையாக இருந்த கப்பல் முகவர்களான Asian Shipping Agencies, சரக்கு கையாளும் & டிரான்ஸ்போர்ட் முகவர்கள் மற்றும் ஏற்றுமதியார்கள் , துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் துறைமுக ஆணையத்தலைவர் தா.கீ. இராமச்சந்திரன் பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் பேசிய அவர் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தினால் வழங்கப்படும் சிறப்பான சேவை நம் நாட்டின் சுற்றுபுறச்சூழலின் மேன்மைக்கும் புதைக்கப்பட்ட மின்சாரம் தயாரிக்கும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.