தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிக பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. மேலும் இரண்டாவது அலை கொரோனா தொற்றால்  பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.  இதனால் தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழுஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி முதல் தளர்வுகள் உடன் இரண்டு வாரங்களுக்கு தமிழக முதல்வரால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு,  அதனைத் தொடர்ந்து 24-ஆம் தேதி முதல் வருகின்ற ஜூன் மாதம் 7-ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 



ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றானது உயர்ந்து கொண்டே இருந்து தற்போது மாவட்டம் முழுவதும் அதிக பரிசோதனை நிலையம் துவங்கப்பட்டதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு கடுமையான முறையில் கடைப்பிடித்தால் கொரோனா தொற்று மாவட்டத்தில் படிப்படியாக குறைய தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இந்த ஐந்து நாட்களாக கொரோனா தொற்றால் பாதித்தவரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளைக்கும், முறையே 640, 548, 432, 473 என்ற எண்ணிக்கையில் குறைந்து இருந்தது. ஆனால் தளர்வு இல்லாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்த வாரத்தில் கொரோனா தொற்று 500 வரை அதிகரித்து காணப்படுகிறது 


திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 497 கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 பேர். கொரோனா தொற்றில் பாதித்தவரின் எண்ணிக்கை 43050 கொரோனா தொற்றால் குணமடைந்து வீடு  திரும்பியவர்களின் எண்ணிக்கை 35637
தற்போது திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவரின் எண்ணிக்கை 6974 . 





திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை ஒருநாள்  தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது இறப்பு சதவீதம் அதிகரித்து இருப்பது நோய்த் தொற்றின் வீரியத்தைக் காட்டுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை ஆரணி ,போளுர், வந்தவாசி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் மட்டும் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்தும் நகர்ப்புறங்களில் கொரோனா  தொற்றின் பாதிப்பு சற்று அதிகரித்தும் காணப்படுகிறது 


திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தினசரி 1000 பேருக்கு கொரோனா பரவியதால் அதனை கட்டுப்படுத்த தீவர நடவடிக்கை எடுக்கப்பட்டன மேலும் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டன. தடுப்பூசி போட கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தடுப்பூசி முகாம்கள் தினமும் நடத்தப்பட்டன. முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம்காட்டினர். ஆதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சினர் இதனால் முகாம்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது இந்நிலையில் கடந்த சில நாட்களில் பொது மக்களிடம் திடீரென தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி போடுவதால் எந்த நிலையிலும் ஆபத்தும் நேரிட்டது என்ற நம்பிக்கையுடன்  அனைவரும் தடுப்பூசி போட ஆர்வமுடன் வருகின்றனர்



மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி உள்ளிட்ட 12 வட்டங்களில் இன்று 150 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது, இதுவரை  மாவட்டம் முழுவதும் ஒரு  லட்சத்து 50ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர், கடந்த 1-ஆம் தேதி 10,500 தடுப்பூசிகள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரப்பட்டது, வரப்பெற்றது.


தற்போது 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வரும்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரைஒரே நாளில் 4956 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்று  முகாமில் கோவேக்சின் முதல் தடுப்பூசி 737  பேரும் இரண்டாவது தடுப்பூசி 118 பேரும் செலுத்தியுள்ளனர் மற்றும் கோவிஷீல்டு முதல் தடுப்பூசி  4021 நபர்களும் இரண்டாவது தடுப்பூசி 80 நபர்களும் செலுத்தியுள்ளனர். இன்றுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசிகள் இருப்பு முடிந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது