புதுச்சேரி : புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சி அனுமதிக்காக மீண்டும் டிஜிபி அலுவலகத்திற்க்கு நேற்று வந்த நிலையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வந்த நிலையில் மீண்டும் இன்று வருமாறு ஜஜி அனுப்பி வைத்தார்.  “கண்டிப்பாக அனுமதி கொடுக்கப்படும்” என ஆனந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

Continues below advertisement

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோக்கு சிக்கல்

புதுச்சேரியில் வருகிற 5-ந் தேதி ரோடு ஷோ நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரையிலும் ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே மைக்கில் பேசவும் அனுமதி கேட்டு 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி த.வெ.க. நிர்வாகிகள் டி.ஜி.பி-யிடம் மனு அளித்தனர். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கும்படி கோரினர்.

த.வெ.க. தலைவர் விஜய், மக்களைச் சந்திக்கும் வகையில் பல இடங்களில் 'ரோடு ஷோ' நடத்தி வந்தார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, அவரது சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் சேலத்தில் பயணத்தைத் தொடங்க திட்டமிட்டபோது, காவல்துறை அனுமதி மறுத்ததோடு, ஒரு மாதத்துக்கு முன்பே மனு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. இந்நிலையில், வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக, கடந்த நவம்பர் 26ஆம் தேதி த.வெ.க. நிர்வாகிகள் புதுச்சேரி டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர். முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்து மனு கொடுத்தனர்.

Continues below advertisement

இச்சூழலில், கடந்த சனிக்கிழமை டிஜிபி அலுவலகத்துக்கு என்.ஆனந்த் வந்தார். டிஜிபி இல்லாததால் திங்கள்கிழமை வருமாறு காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று ஐஜி ஏ.கே. சிங்கிளாவை சந்தித்து விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி தருமாறு வலியுறுத்தினார். டிஜிபி, டிஐஜி ஊரில் இல்லை. அவர்கள் நாளை வருவார்கள் நாளை வந்தவுடன் வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார். இந்த நிலையில் மீண்டும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளார்.

நிச்சயம் அனுமதி கிடைக்கும்!

இதையடுத்து, அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆனந்த், 'விஜயின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சிக்கு நிச்சயம் அனுமதி கிடைக்கும்' என தெரிவித்தார்.

திடல் போன்ற இடத்தில் அனுமதி வழங்க வாய்ப்பு

இது குறித்து, புதுச்சேரி காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், 'கரூர் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து, 'ரோடு ஷோ'வுக்கான வழிகாட்டு நெறிமுறை தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்துவது சிரமம்.

எனவே, திடல் போன்ற இடத்தில், மக்கள் மத்தியில் விஜய் பேச அனுமதி தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்' என்றனர். இதனால், புதுச்சேரியில் விஜய் 'ரோடு ஷோ'விற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.