வட ஆற்காடு மாவட்டதில் இருந்து திருவண்ணாமலை  மாவட்டமாக பிரிக்கப்பட்டு இன்றுடன் 32 வருடங்கள்  ஆகின்றது. இதுவரையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இதுவரையில் 22 ஆட்சிதலைவர்கள் பணியாற்றி வந்துள்ளனர். 


திருவண்ணாமலை மாவட்டம் உருவான வரலாறு; 


தமிழகத்தில் ஆற்காட்டில் அவுரங்கசீப் கர்நாடகப் பகுதியில் வரிவசூல் செய்ய அனுப்பப்பட்டவர் அலி என்பவர் இவரே முதல் ஆர்க்காட்டு நவாப் ஆகும் இவருக்குப் பிறகு தோஸ்த் அலி கான், முகம்மது அலி கான், வாலாஜா ஆகியோர் ஆற்காட்டை ஆண்டுவந்த சிற்றரசர்கள் ஆகும். அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி பல்வேறு சட்டங்களால் முகலாய ஆட்சி அமைப்பு முறையில் இருந்து ஆங்கில நிர்வாக ஆட்சி அமைப்பு களாக மாற்றிக் கொண்டு வந்தனர். 1744 ஆம் ஆண்டு பிட்டிஷ் இந்திய சட்டம் சென்னை மாகாணத்தில் கவர்னர் தலைமையிலான ஆட்சி முறையை ஏற்படுத்தியது.




தொடர்ந்து இப்பகுதியில் நிர்வாக நடவடிக்கைகள், ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தப்பட்டன. கர்நாடகா, மைசூர் போரில் ஆங்கிலேயர்களே வெற்றி பெற்றனர். 1760 அம் ஆண்டு  வந்தவாசி போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றவுடன் பிரஞ்சு ஆதிக்கம் பாண்டிச்சேரியுடன் அடங்கியது. அதனைத் தொடர்ந்து நான்காம் ஆண்டு போரின் இறுதியில் 1799 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் திப்பு சுல்தானை போரில் கொன்றனர். அத்துடன் கர்நாடகப் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. ஆற்காடு நவாப் தனது தவறான நிர்வாகத் திறனால் ஆட்சிப் பகுதிகளை படிப்படியாக ஆங்கிலேயர்களிடம் இறந்துவிட்டார்கள்.



1801ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பின், ஆட்சி முழுமையாக ஆங்கிலேயர்களுக்கு சென்றது ஆங்கிலேயர் கைப்பற்றிய பகுதிகளை வட்டமாக, கோட்டமாக, மாவட்டமாக பிரித்து ஆளத் தொடங்கினர். அதன்படி உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம் உருவாகின, அதன் பின்னர் மற்ற மாவட்டங்கள் உருவாகினர், அப்போது 1801ஆம் ஆண்டு பாலாற்றுக்கு தென்பகுதியிலுள்ள வட்டங்களை சேர்த்து தென் ஆற்காடு மாவட்டம் என்று பாலாற்று வடபகுதியில் வட்டங்களை சேர்த்து வட ஆர்க்காடு வட்டங்கள் என்று பிரித்தனர். அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தில் ஆரணி போளூர் திருவண்ணாமலை சேத்துப்பட்டு வந்தவாசி உள்ளிட்ட இரு வட்டங்கள் இருந்தன மீண்டும் மாவட்ட எல்லையில் சீரமைக்கப்பட்டு ஆரணி போளூர் வந்தவாசி வேலூர் ஆற்காடு வட ஆற்காடு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன 1801 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஸ்ரேட்டன் என்பவரே முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆவார். 



1911 ஆம் ஆண்டு மாவட்ட எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது அதன்படி தென்னார்க்காடு மாவட்டத்தில் இருந்த திருவண்ணாமலை வட ஆற்காடு மாவட்டத்தில் மாற்றப்பட்டது வட ஆற்காடு மாவட்டத்தில் மூன்று வருவாய் கோட்டங்கள் இருந்தன அவை வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலையாகும் 1959 ஆம் ஆண்டு செய்யாறு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக வட ஆற்காடு மாவட்டத்தில் இரண்டாக பிரித்து திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் மேலூரை தலைமையிடமாக கொண்டு வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் வருவாயென 1997ஆம் ஆண்டு தமிழகம் முழுதும் பல்வேறு பெயர்களில் இருந்த மாவட்டத்தின் பெயரில் ஊரின் பெயரைக் கொண்டு மாற்றம் செய்யப்பட்டது அதன்படி திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் தலைமை மாவட்டம் என ஆனது. 



அதன்பிறகு திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, செங்கம் வட்டத்தில் இருந்து ,தண்டராம்பட்டு வட்டம் 2007ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. அதன்பிறகு 2015இல் போளூர் வட்டத்தில் இருந்து கலசபாக்கம் தனியாக பிரிக்கப்பட்டது.  2015ஆம் ஆண்டு ஆரணி வந்தவாசி வட்டங்களில் உள்ள கிராமங்களை ஒன்றிணைந்து சேத்துப்பட்டு வட்டம் உருவானது. ஏற்கனவே 1860 ஆம் ஆண்டு சேத்துப்பட்டு வட்டத் தலைநகர் என்ற சிறப்பை இறந்தது ,அது மீண்டும் அதே வருடம் செய்யாறு வட்டத்தில் உள்ள வெம்பாக்கம் ஒன்றிய பகுதியை பிரித்து வெட்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் பிரிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு திருவண்ணாமலை இரண்டாக பிரித்து கீழ்பெண்ணாத்தூர் தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு செங்கம், போளூர், கலசபக்கம் ஆகிய வட்டங்களில் உள்ள மலை கிராமங்களை உள்ளடக்கிய ஜமுனமரத்தூர் ஊரை தலைமையிடமாக கொண்டு சட்டத்தை உருவாக்கியது. மேலும் திருவண்ணாமலை செய்யாறு வருவாய் கோட்டங்கள் பிரித்து ஜமுனமரத்தூர் ஆரணி போளூர் கலசபாக்கம் வட்டங்களை உள்ளடக்கி தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டு தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வருவாய் வட்டங்களும் 3 வருவாய் கோட்டங்கள் உடன் செயல்பட்டு வருகின்றது