தமிழ்நாடு :

  • கனமழை காரணமாக மயிலாடுதுறை , கடலூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  • விழுப்புரம் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு
  • புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
  • சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு
  • தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை
  • வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • சென்னையில் பெய்த மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
  • மழைநீர் தேங்கிய இடங்களில் நீரை அகற்ற உடனே நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • அ.தி.மு.க. அரசை குறை கூறி பிரச்சினையை திசை திருப்பக்கூடாது – எடப்பாடி பழனிசாமி
  • தஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா – அடுத்தாண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படும் –
  • தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவது குறித்து நாளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை உடனே அமைக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

இந்தியா :

  • உர மானியமாக ரூபாய் 51 ஆயிரத்து 875 கோடி ஒதுக்கி பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவு
  • மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் – உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல்
  • ஆந்திராவில் டிராக்டர் மீது மின் கம்பி அறுந்துவிழுந்து 6 பேர் உயிரிழப்பு

உலகம் :

  • இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை
  • இலங்கையில் மீண்டும் வலுக்கும் போராட்டம் : ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டம்

விளையாட்டு :

  • டி20 உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி