கரூர் அருகே ESI மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிப்பதில்லை எனக் கூறி 200க்கும் மேற்பட்ட TNPL ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த கந்தம்பாளையத்தில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை என்று சொல்லக் கூடிய ESI மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.


 


 




 


இந்த மருத்துவமனையை சுற்றியுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம், அதன் துணை நிறுவனமான சிமெண்ட் தொழிற்சாலை, ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றக் கூடிய சுமார் 3000 ஒப்பந்த தொழிலாளர்கள் இங்கு கிசிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை, மருத்துவர்கள் தூரத்தில் நிற்க வைத்தும், மாத்திரைகளை அள்ளிக் கொடுத்து அனுப்பி வைத்து விடுவதாக கூறி தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 




 


தொழிலாளர்களின் பங்காக பணத்தை பெற்றுக் கொண்டு நடத்தப்படும் இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு முறையாக தொகையை திருப்பிப் தர மாதக் கணக்கில் காத்திருப்பதாகவும், தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் அடிப்படையில் ESI தொழிலாளர்கள் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும், மாவட்ட அளவில் அனைத்து வசதிகளுடன் சேர்ந்த அரசு மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.


 




தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுடைய பணியை புறக்கணித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண