மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் பிஎம்.ஸ்ரீ திட்டம் பற்றி பேசியது என்ன என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.


பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து ஆலோசிக்க குழு அமைத்த பிறகே முடிவு என தெளிவாக கூறியிருந்தோம். நாட்டின் நெம்பர் ஒன் முதல்வரான ஸ்டாலின் தான் சூப்பர் முதல்வர். கொள்கையை விட்டுவிட்டு பணத்தை பெற்றுக்கொள்வதில் என்ன பயன்? மத்திய அரசு நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. மும்மொழிக்கொள்கையை ஏற்க மாட்டோம். நாகரீகமற்றவர்கள் என்று மத்திய அரசு கூறியதில் இருந்தே அவர்களின் மனநிலை புரிகிறது.


தமிழ்நாட்டில் மாணவர்களை மந்தப்படுத்த மத்திய அரசு முனைகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிப்பதால் தான் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுகிறார்கள். தேசிய கல்விக்கொள்கையில் சில மாற்றங்கள் செய்ய சொல்லி கருத்துக்கள் அனுப்பினோம்.


கல்விக்கொள்கையை ஏற்றால் 3000 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் நிலைக்கு ஆளாவோம். அனைத்திலும் முதல் பரிசு பெறுவதால் தமிழக அரசை ஓட விடமாட்டேன் என்கிறார்கள். கல்வி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.


இதனிடையே பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா “மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எல்லை மீறி பேசுகிறார். மும்மொழிக்கொள்கையில் எங்களுக்கு புரிதல் இல்லை என தர்மேந்திர பிரதான் பேசுவதற்கு அதிகார்ம இல்லை. முதல்வர் குறித்து தர்மேந்திர பிரதான் பேசியது ஏற்புடையது அல்ல. நாகரீகமற்றவர்கள் என தர்மேந்திர பிரதான் பேசியது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்தார்.