தமிழ்நாடு எப்போதும் Out of Control தான் – எகிறி அடித்த ஸ்டாலின் - அதிர்ச்சியில் டெல்லி பாஜக

தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு out of control தான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

 தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு out of control தான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்மைச்சர் ஸ்டாலின் “நிதிக்காக நாங்கள் அழவில்லை. எங்கள் உரிமையை கேட்கிறோம். குஜராத் முதலமைச்சராக பிரதமர் மோடி இருந்தபோது ஆளுநர் மூலமாக மத்திய அரசு தனி ராஜாங்கம் நடத்துகிறது என குற்றம் சாட்டினார். மத்திய அரசிடம் கையேந்த மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா என மோடி முதல்வராக இருந்தபோது பேசியிருக்கிறார்.

ஆனால் தற்போது எவ்வளவு நிதி கொடுத்தாலும் இங்கிருப்பவர்கள் அழுகிறார்கள் என மோடி பேசியிருக்கிறார். நிதிக்காக நாங்கள் அழவில்லை. உரிமையைத்தான் கேட்கிறோம். யார் காலிலும் விழாதவன் நான். நிதிக்காக மாநிலங்கள் அழுகின்றன என மோடி பேசுவது எந்த விதத்தில் நியாயம். 2026 தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். 

டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு அடிபணியாது. ஏவல் அமைப்புகளை பயன்படுத்தும் உருட்டம்ல் மிரட்டல்களுக்கு தமிழ்நாடு அடிபணியாது. அமித் ஷா இல்லை; எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது. ஸ்டாலின் இருக்கும்வரை தமிழ்நாட்டை ஆள முடியாது. இந்தியை திணிக்க மாட்டோம் என அமித் ஷாவால் உறுதி அளிக்க முடியுமா?

எதிர்க்கட்சிகள் எதிரிகட்சிகள் போல் செயல்படுகிறார்கள். ஆட்சி மீது எந்த குறையும் சொல்ல முடியாமல் அவதூறு பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டை அடகு வைப்பதே பிரதான எதிர்க்கட்சிகளின் வேலையாக உள்ளது. மாநில உரிமைக்கான அகில இந்திய முகமாக திமுக உள்ளது.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது. மற்ற மாநிலங்களில் செய்வதுபோல் உங்கள் வேலையை தமிழ்நாட்டிடம் காட்ட முடியாது. தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையாது; நீட் விலக்கு உள்ளிட்டவை குறித்து அமித் ஷா உறுதியளிப்பாரா? அனைத்து மாநிலங்களின் உரிமைகளை நாங்கள் மீட்டுத்தருவோம். ரெய்டு நடத்தி அடிபணிய வைக்கும் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது. இவ்வளவு தடைகளை தரும்போதே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. எந்த தடையும் இல்லாமல் இருந்தால் தமிழ்நாடு எப்படி இருக்கும். தடைகளை சட்டப்படி உடைப்போம்” எனத் தெரிவித்தார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola