தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


“இந்து சமய அறநிலையத்துறை மூலம் 620-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல். திருத்தேர்களை பழுதுபார்த்து வீதி உலா. திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.


வடபழனி திருக்கோயில்:


அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து சென்னை. வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் 38.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி. திருவல்லிக்கேணி. அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் சார்பில் 7:14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் 3.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி. சேலம் மாவட்டம், சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் 3.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி




நாமக்கல். எஸ்.பழையபாளையம். அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் 1.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டும் பணி. ஈரோடு மாவட்டம், பண்ணாரி. அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் 13.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்பது நிலை இராஜகோபுரம் மற்றும் கிரில்களுடன் கூடிய சுற்றுச்சுவர் கட்டும் பணி.


கரூர், திருச்சி:


கரூர், தான்தோன்றிமலை. அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் 2.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிகாணிக்கை மண்டபம் கட்டும் பணி. தேனி, வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் 4.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி. தேவதானம்பட்டி. அருள்மிகு மூங்கிலனை காமாட்சியம்மன் திருக்கோயிலில் 3.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி


திருச்சி, சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 3.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமாவாசை மண்டபம் கட்டும் பணி, ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமடம், மருத்துவமனை மற்றும் உணவு அறை கட்டும் பணி, தஞ்சாவூர், கும்பகோணம், அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி. திருவாரூர் மாவட்டம், குடவாசல், அருள்மிகு கோணேஸ்வர சுவாமி திருக்கோயிலில் 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டும் பணி, ஊத்துக்காடு, அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று நிலை இராஜகோபுரம் கட்டும் பணி. மன்னார்குடி, அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி




தூத்துக்குடி, திருவள்ளூர்:


தூத்துக்குடி கோவில்பட்டி, அருள்மிகு பூவநாத சுவாமி திருக்கோயிலில் 2.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி. கோயம்புத்தூர், தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ர காளியம்மன் திருக்கோயிலில் 5.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழுநிலை இராஜ கோபுரம் கட்டும் பணி, மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 5.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை. கட்டணச் சீட்டு வழங்குமிடம் ஆகியவற்றை கட்டும் பணி மற்றும் 3.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை சீரமைக்கும் பணி:


திருவள்ளூர், திருத்தணிகை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 40.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபங்கள் மற்றும் பணியாளர்கள் நிர்வாக பயிற்சி மையம் கட்டும் பணி. மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியாழ்வார் திருவரசு மேம்படுத்தும் பணி. சென்னை, உத்தண்டி. அருள்மிகு பிடாரி அகிலாண்டம்மன் திருக்கோயிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணி என மொத்தம் 149.93 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திருக்கோயில்களின் புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச்செயலாளர் முனைவர் இறையன்பு உள்பட பலர் பங்கேற்றனர்.


150 கோடி ரூபாய்


அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 149 கோடி 93 லட்சத்து 21  திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு. புதிய அடுக்குமாடி குடியிருப்புகள். சுற்றுச்சுவர் கட்டுதல், முடிகாணிக்கை மண்டபம். பக்தர்கள் தங்கும் விடுதி, அமாவாசை மண்டபம், பசுமடம், மருத்துவமனை மற்றும் உணவு அறை, மின்தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை. கட்டணச் சீட்டு வழங்குமிடம், தார் சாலை. பணியாளர்கள் நிர்வாக பயிற்சி மையம் போன்ற 29 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்."


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.