ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ரவி வணக்கம் தெரிவித்து சட்டப்பேரவையில் உரையை தொடங்கினார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஜார்ஜ் கோட்டையில் இருந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி  பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டார்.