நம்ம கட்டமைப்பு சார் இது, அதை சிதைக்கும் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை திமுக கடுமையாக எதிர்க்கிறது என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்டத்திருத்த மசோதா குறித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்த்தார். அப்போது பேசிய அவர், 


நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு முதலமைச்சர் தொடர்ந்து எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார்.


இந்த சட்டத்திருத்த மசோதா ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டிஆர் பாலு கடுமையாக  எதிர்த்து திமுகவின் எதிர்ப்பு குரலை பதிவு செய்தார். தனியார் துறைகள் அரசின் மின்சார கட்டமைப்பை இலவசமாக பயன்படுத்திக்கொள்வார்கள்.1.59 ஆயிரம் கோடி கடன் பெற்று ஏற்படுத்திய கட்டமைப்பை தனியார் துறை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மசோதா உள்ளது.


விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரம்,100 யூனிட் இலவச மின்சாரம், விசை திரி பயன்படுத்துவோருக்கு வழங்கும் மின்சாரம் எல்லாம் இந்த மசோதாவால் பாதிப்பு ஏற்படும். மாநிலங்களுக்கு போடப்படும் அபராதத் தொகை 100 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மாற்றி அமைக்கும் வகையில் மசோதா உள்ளது.


மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு அதிமுக இதுவரை எந்த எதிர்ப்பு குரலையோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை. மின்சார திருத்த சட்ட மசோதா நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு காரணமே திமுக தான். நிச்சயம் மின்சாரத்துறையை தனியார் மையமாக்கும் ஒரு முயற்சி தான் இந்த மசோதா.


 முழுமையான எதிர்ப்பு குரலை திமுக தொடர்ந்து இந்த சட்ட மசோதாவை எதிர்த்து குரல் எழுப்பும். முதலாளிகள் கையில் சென்றால் ஏழை மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மாநில அரசிற்கும், மின்சார வாரியத்திற்கும் எந்த அதிகாரமும் இல்லை. முழு தனியார் மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவது தொடர்பாக எந்த சரத்தும் மசோதாவில் இடம் பெறவில்லை.


சொந்த காசில் ஒருவர் கார் வாங்கினால் டீசல் அடித்து காரை இன்னொருவர் ஓட்டி செல்கிறேன் என்ற சொல்லுவது போல் இருக்கிறது இந்த சட்டம். இது நம்ம கட்டமைப்பு அதனை சிதைக்கும் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை திமுக கடுமையாக எதிர்க்கிறது” என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் இந்த மசோதா தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனவும் தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண