Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து ஐந்தாவது நாளாக 57 கன அடியில் நீடிப்பு..


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 57 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் படிக்க..


Chennai Traffic: சென்னைவாசிகளே.. அடுத்த 3 மாசம் போக்குவரத்து மாற்றம்.. ஒருவழிப்பாதையான முக்கிய இடம்!


சென்னையில் ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறுவதால் முக்கிய வழித்தடத்தில் இன்று முதல் வாகன போக்குவரத்து மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “சென்னை கோட்டை அருகே ரிசர்வ் வங்கி தலைமையகம் வாயிலில் உள்ள சுரங்க பாதை ரயில்வே பாலத்தில் 4வது ரயில் பாதைக்கான தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று (ஏப்ரல் 26) முதல் அடுத்த 3 மாதத்திற்கு இரவு 10 மணி முதல் ஒருவழி பாதையாக மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..


Chennai Airport: குப்பைத் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு


சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக அதிகளவு கடத்தல் தங்கம் பிடிபட்டு வருகிறது. இதன் காரணமாக, விமான நிலையத்தில் பயணிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், சென்னை விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியில் தங்க நகைகள் கிடந்துள்ளது. 1200 கிராம் எடையுள்ள இந்த தங்க நகைகளின் மதிப்பு ரூபாய் 75 லட்சம் ஆகும்.


DMK Functionary Arrested : “பெண் வி.ஏ.ஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக நிர்வாகி ராஜீவ்காந்தி’ விழுப்புரத்தில் கைது செய்தது போலீஸ்..!


விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த ஆ.கூடலூர் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் சாந்தி. கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது இரவு வாக்குச்சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாந்தி உணவு வழங்கியுள்ளார். அப்போது தான் வாங்கி வந்த உணவை சாந்தி எடுத்து கொடுத்து விட்டதாக கூறி, திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை கன்னத்தில் அறைந்து, தகாத வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது.  இதனை அங்கிருந்த அதிகாரிகளும் தடுத்துள்ளனர். மேலும் படிக்க..


Vishal: "அதிகார திமிரில் ஆடுறாங்க" - ரத்னம் பட விஷயத்தில் விஷாலுக்கு ஜெயக்குமார் ஆதரவு!


ரத்னம் பட விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் “ரத்னம்”. ஹரி இயக்கியுள்ள இப்படத்தில் விஷால், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் என பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ரத்னம் படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் படிக்க..