தமிழ்நாட்டில் இதுவரை நிகழந்த முக்கியச் செய்திகளை கீழே காணலாம். இது செய்தியின் சுருக்கமாகும். விரிவான செய்திகளுக்கு ஏபிபி நாடு  தளத்தில் பார்க்கவும்.


TN Weather Update: 3 மாவட்டங்களில் மிக கனமழை.. குன்னூரில் பதிவான 17 செ.மீ மழை.. வானிலை நிலவரம் என்ன?


அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி,  கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.


“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!


நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வெறுப்பை தூண்டும் விதமாக பேசுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை - பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார்.


ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?


ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி நியமனம் செய்யப்பட்டார். தமிழகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் விழுப்புரம் மாவட்டம் அரசியலிலும், அரசு உயர் பதவியிலும் பலர் தடம் பதிக்க வைத்த பெருமையை கொண்டுள்ள மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. அரசு உயர் பதவியிலும், மத்திய, மாநில அரசின் பல சாதனை திட்டங்களிலும் அங்கம் வகித்தவர்கள் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருந்து வருகின்றனர். சமீபத்தில் உலக நாடுகளே வியந்து பார்க்கக் கூடிய திட்டமான சந்திராயன்-2 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரம் பகுதியை சேர்ந்த  ரயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!


ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு மே 22 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Cauvery river: குறைந்த மழை... காவிரி ஆற்றில் நீர்வரத்து 1500 கன அடியாக சரிவு


பருவ மழை பொய்த்து போனதாலும், கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், காவிரி ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக இருந்து வந்தது. இந்த நிலையில் காவிரி ஆறு வரண்டு பாறைகளாகவும் காட்சியளித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.


Chennai: 200 ல் இருந்து 250 வார்டாக மாறும் சென்னை.. எந்தெந்த ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது? முழு விவரம்..


200 வார்டுகள், 15 மண்டலங்களாக தற்போது மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி எல்லையை மீண்டும் விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி செந்தில்குமார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி சென்னை புறநகரில் உள்ள மேலும் 50 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க திட்டம் வகுத்துள்ளது.