கேரளா நிலச்சரிவு: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிதி அறிவித்தார்; 


கர்கேரளாவில் அமைந்துள்ளது வயநாடு. அந்த மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமாக திகழும் வயநாட்டில் நேற்று நள்ளிரவில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த துயரச்சம்பவத்தால் ஒட்டுமொத்த கேரளமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த துயர சம்பவத்தால் மொத்தம் 54 பேர் பரிதாபமாக இதுவரை உயிரிழந்துள்ளனர். இப்பேரிடரை எதிர்கொள்ள கேரள அரசிற்கு 5 கோடி நிதி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


TVK Vijay : ”போர்க்கால அடிப்படையில் செயல்படுங்க..” கலங்கவைக்கும் வயநாடு சோகம்.. விஜய் வேண்டுகோள்


வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.


DMK : ”திமுகவிற்கு அவப்பெயர் – கொதித்தெழுந்த துரைமுருகன்”


போதை பொருள் வழக்கில் சிக்கிய நிர்வாகி அதிரடி நீக்கம்..! ”ஜாபர் சாதிக்கை தொடர்ந்து சய்யது இப்ராகிமையும் திமுகவில் இருந்து நீக்கி தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது”


ஆடி கிருத்திகை... முருகனுக்கு அரோகரா... அந்தரத்தில் தொங்கியபடி முருக பக்தர்கள் நேர்த்திக்கடன்


திருவண்ணாமலையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பக்தர்கள் தங்களுடைய முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடியும் தேர் இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.


Mettur Dam Water Level: முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை... 11 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை


சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியைத் தாண்டியுள்ள நிலையில், மேட்டூர் அணையையொட்டி காவிரிக் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேட்டூர் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 23,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் அதிகளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்த 27-ந் தேதி, 71 வது முறையாக எட்டியது.


மதுரை கப்பலூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகனம் கட்டண விலக்கு விவகாரம் -   போராட்டத்தால் பரபரப்பு


டோல்கேட்டுக்கு எதிராக நடைபெறும் போராட்டம், காரணமாக ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டக் குழுவை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.