- கோவை அவினாசி சாலையில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
- குமாரபாளையம் அதிமுக பரப்புரையின்போது தவெக கொடியை அக்கட்சித் தொண்டர்கள் உயர்த்திப் பிடித்தபோது, ‘கூட்டணிக்கு பிள்ளையார் சுழி‘ போட்டுவிட்டதாக இபிஎஸ் சூசக பேச்சு.
- மருத்துவப் பயனாளர்கள் என அழைப்பதில் என்ன பிழை இருக்கிறது என்றும், எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்க வேண்டாம் எனவும் இபிஎஸ்-க்கு அமைச்சர் எ.வ. வேலு பதில்.
- தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் சோதனை நடத்தினர். மிரட்டல் வெறும் புரளி என தகவல்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது. ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து கிராம் ரூ.11,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.91,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இன்று கைது செய்தது இலங்கை கடற்படை. நேற்று இரவு 30 பேர் கைது செய்யப்ட்ட நிலையில் இன்றும் கைது நடவடிக்கை.
- மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கோல்ட்ரிஃப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது.
- தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தென்காசியில் ஒரே நாளில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என 24 பேரை தெருநாய்கள் கடித்துக் குதறியதால் அதிர்ச்சி.
- ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் முகம்மது பாகிம் என்ற பள்ளி மாணவர் உடற்பயிற்சி செய்த கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.