- வங்கக் கடலில் சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 560 கி.மீ. தொலைவில் உள்ள மொன்தா புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
- மேற்குத் தொடர்ச்சி மழையால் மேகமலை அருவியில் கடும் வெள்ளம். பாதுகாப்புத் தடுப்புகள் சேதமடைந்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 10-ஆம் நாளாக நீடிக்கிறது.
- சென்னை மணலி புதுநகர் அருகே கொசஸ்தலை ஆற்றில் மதுபோதையில் ரூ.1,000 பந்தயம் கட்டி நீச்சல் போட்டியில் ஈடுபட்ட இருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆஜராக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமாருக்கு சிபிஐ சம்மன்
- தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்.
- பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வாலாஜாபாத் - அவலூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 30 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
- திருச்செந்தூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்வைக் காண குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் 4,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று மாலை 4.15 மணிக்கு வெளியிட உள்ளதாகத் தகவல்.
Tamilnadu Roundup: உருவானது மோன்தா புயல்.. விசாரணைக்கு வரும் தவெக வழக்குகள்! குறைந்த தங்க விலை- 10 மணி செய்திகள்
ஜேம்ஸ் | 27 Oct 2025 09:58 AM (IST)
TN Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தலைப்புச் செய்திகள்
Published at: 27 Oct 2025 09:58 AM (IST)