• பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது சட்டப்பேரவை. கரூர் சம்பவம், இருமல் மருந்து விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு.
  • கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்.
  • பாமக சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே. மணியை நீக்குவது தொடர்பாக அளிக்கப்பட்ட மனு குறித்து கேட்டறிய, சபாநாயகர் அப்பாவு உடன் பாமக அன்புமணி தரப்பு சந்திப்பு.
  • கரூர் சம்பவத்திற்குப் பின் தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் தவெக தலைவர் விஜய்யுடன் சந்திப்பு.
  • கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு, வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.5000 உதவித்தொகை வழங்கப்படும் என தவெக நிர்வாகி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.1,960 உயர்ந்து, ஒரு சவரன் 94,600-க்கும், ஒரு கிராம் ரூ.11,825-க்கும் விற்பனை. வெள்ளி விலையும் அதிடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.206-க்கு விற்பனை.
  • சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ போக்சோ வழக்கில் கைது.
  • சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்ற முறையில் தயார் செய்யப்படுவதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
  • தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிப்பு.
  • தேனி சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு. 126 அடி கொள்ளளவு கொண்ட அணையில், 76 அடியாக இருந்த நீரின் அளவு 86 அடியாக அதிகரிப்பு.

 

Continues below advertisement

Continues below advertisement